7 4 scaled
உலகம்செய்திகள்

ஆப்பிரிக்க நாடு ஒன்றிற்கு பயண எச்சரிக்கை விடுத்த கனடா

Share

ஆப்பிரிக்க நாடு ஒன்றிற்கு பயண எச்சரிக்கை விடுத்த கனடா

நைஜீரியாவில் உள்ள கனேடிய தூதரகத்தில் வெடிகுண்டு வெடித்து இருவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து கனடா விசாரணை நடத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார்.

அத்துடன், மேற்கு ஆபிரிக்க நாடான நைஜீரியாவுக்கு அவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு பிரித்தானியா மற்றும் அமெரிக்காவை அடுத்து கனடாவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நைஜீரியாவில் உள்ள உயர் ஸ்தானிகராலயத்தில் வெடிப்பு ஏற்பட்டதை உறுதி செய்துள்ளதாகவும், தீ அணைக்கப்பட்டு, இந்த நிலைமைக்கு என்ன காரணம் என்பதை அறிய விசாரணை முன்னெடுக்கபப்ட்டு வருவதாகவும் அமைச்சர் ஜோலி சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ளார்.

மட்டுமின்றி, இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, நைஜீரிய ஜனாதிபதியின் செய்தித்தொடர்பாளரும் நடந்த சம்பவத்தை உறுதி செய்துள்ளதுடன், மேலதிக தகவல்களை வெளியிட மறுத்துள்ளார்.

மேலும், ஜனாதிபதி டினுபு இறந்தவர்கள் ஆன்மாக்கள் சாந்தியடைய பிரார்த்திப்பதோடு காயமடைந்த அனைவரும் விரைவாகவும் பூரண குணமடையவும் பிரார்த்திக்கிறார் என அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...