23 654605ab6d49e md
உலகம்செய்திகள்

புறக்கணிக்கப்படும் வட மாகாண வைத்தியசாலைகள்: தீர்வை பெற்றுத்தருவதாக திலீபன் எம்.பி உறுதி

Share

புறக்கணிக்கப்படும் வட மாகாண வைத்தியசாலைகள்: தீர்வை பெற்றுத்தருவதாக திலீபன் எம்.பி உறுதி

வட மாகாணத்தில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை புறக்கணிக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும், வரவு செலவுத்திட்டத்தின் மூலம் தீர்வை பெற்றுத்தருவதாகவும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே.திலீபன் தெரிவித்துள்ளார்.

மன்னார் பொது வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் (03.11.2023) விஜயம் மேற்கொண்டு வைத்தியசாலையின் உதவி பணிப்பாளர், வைத்தியர் யோகேஷ்வரனுடன் கலந்துரையாடலொன்றை மேற்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

கொலை செய்யப்பட்ட தினேஷ் ஷாப்டரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு :தீவிர பாதுகாப்பில் வைத்தியசாலை

அவர் மேலும் கூறுகையில்,
“வடமாகாணத்தின் வைத்தியசாலைகளில் கட்டிட, ஆளணித்துவ மற்றும் சிகிச்சை உபகரணங்கள் ரீதியாக மன்னார் பொது வைத்தியசாலையே மிகவும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

வைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகள் மற்றும் வளப்பற்றாக்குறைகள் இருந்த போதிலும் வைத்தியர்களால் மக்களுக்கு சிறந்த சேவைகள் வழங்கப்படுகின்றது.

எனினும், நிலவிவரும் குறைபாடுகளுக்கான தீர்வுகளை ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முன்னுரிமையின் அடிப்படையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தில் என்னால் பெற்றுத் தர முடியும் என நான் நம்புகின்றேன்.

மேலும் வைத்தியசாலையின் தேவைகளை, நடைபெற இருக்கும் வரவு செலவுத்திட்ட கூட்டங்களின் போது முன்வைத்து, அவற்றை நிறைவேற்றுவேன்” என தெரிவித்திருந்தார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...