6 2 scaled
உலகம்செய்திகள்

IT, ED எல்லாம் பாஜகவின் அணிகள்: தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து

Share

IT, ED எல்லாம் பாஜகவின் அணிகள்: தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து

வருமான வரித்துறை, அமலாக்கத்துறை எல்லாம் பாஜகவின் அணிகள் என்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் அதிகாலை முதலே வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி, சென்னை தி.நகர், அண்ணா சாலை, கீழ்பாக்கம், வேப்பேரி, ஆகிய இடங்களில் 30க்கும் மேற்பட்ட கார்களில் சென்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தி.மு.க அரசு சார்பாக சென்னையில் நீட் விலக்கு தொடர்பாக தொடங்கப்பட்டுள்ள கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை எல்லாம் பாஜகவின் அணிகள் என்று விமர்ச்சித்துள்ளார்.

அத்துடன் கடந்த 2,3 மாதங்களாக பாஜக அணிகள் செயல்பாடு அதிகரித்து வருவதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார்.

நீட் விலக்கு என்பது தமிழக மாணவர்களுக்கான உரிமை என்பதால் கூட்டணி கட்சி தலைவர்களிடமும் கையெழுத்து பெற்று வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...