tamilni 12 scaled
இலங்கைசெய்திகள்

வீதி விபத்துகளில் பறிபோகும் சிறுவர்களின் உயிர்!

Share

வீதி விபத்துகளில் பறிபோகும் சிறுவர்களின் உயிர்!

இந்த வருடத்தில் மாத்திரம் இலங்கையில் வீதி விபத்துக்களினால் 115 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக வீதி விபத்துக்களை தடுப்பதற்கான நிபுணர் குழுவின் தலைவர் பேராசிரியர் சமத் தர்மரத்ன தெரிவித்துள்ளார்.

”பாதுகாப்பான சாலைகள்-பாதுகாப்பான குழந்தைகள்” என்ற சர்வதேச சாலை பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில்,நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான பணியாளர்களை உருவாக்கும் 15 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களே பெரும்பாலும் இந்த விபத்துக்களால் பாதிக்கப்படுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் சுமார் 3,000 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழக்கின்றனர், மேலும் இது தொடர்பான போக்கு அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில், எதிர்காலத்தில் வீதி விபத்துக்களால், உயிரிழப்புகள் மற்றும் ஊனமுற்றவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரிக்கும், இதனால் நாட்டிற்கு கணிசமான பொருளாதார இழப்புக்கள் ஏற்படும் என எச்சரித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...