rtjy 360 scaled
இலங்கைசெய்திகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் குழப்பம்

Share

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் குழப்பம்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தினால் வவுனியாவில் நடாத்தப்பட்ட கலந்துரையாடலில் ஏற்பட்ட குழப்பம் மற்றும் கைகலப்பு தொடர்பாக குறித்த சங்கம் விளக்கமளித்துள்ளது.

இது தொடர்பில் குறித்த சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கமானது எட்டு மாவட்டங்களிலும் மாவட்ட நிர்வாகத்தை ஸ்தாபித்து அவர்களை நிர்வாகித்து வரும் ஒரு தாய் அமைப்பாகும். வவுனியா மாவட்டத்தின் நிர்வாகமானது திருமதி சறோஜினி என்பவர் தலைமையில் இயங்கி வருகின்றது.

வவுனியா மாவட்டத்தின் செயலாளராகவும் எட்டு மாவட்ட நிர்வாகத்தின் பொருளாளராகவும் இருந்த திருமதி ஜெனிதா அவர்களை கடந்த வருடம் டிசம்பர் மாத இறுதியில் நடந்த சில சம்பவங்களிற்காக ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு 6 மாதங்களிற்கு பொறுப்புக்கள் அனைத்திலிருந்தும் விலகி சாதாரண உறுப்பினராக இருக்கும் படி எமது சங்கத்தினால் அறிவுறுத்தப்பட்டார்.

அவரிடம் உள்ள சகல ஆவணங்கள், வரவு செலவு கணக்கு, பணக்கையிருப்பு அனைத்தையும் மீள ஒப்படைக்குமாறும் கோரப்பட்டிருந்தார்.தொடர்ந்து பதிவுத்தபாலில் எழுத்து மூலமாகவும் அவர் மேற்படி தீர்மானத்தின்படி செய்யும் படி அறிவுறுத்தப்பட்டார்.

ஆனால் அவர் இன்று வரை சங்கத்தின் ஆவணங்களையோ, வரவு செலவு கணக்கு, பணக்கையிருப்பு என்பவற்றை நிர்வாகத்திடம் ஒப்படைக்கவில்லை. இவ்வாறாக ஒழுக்காற்று நடவடிக்கையை தொடர்ந்து வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் நிர்வாக ஒழுங்கிற்கு உட்படாமல் தன்னிச்சையாக இயங்கிக் கொண்டிருக்கின்றார்.

இந்த நிலையில் வவுனியா மாவட்டத்தின் தலைவி திருமதி சறோஜினி அணுகிய, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பலர் ( திருமதி ஜெனிதாவின் நடவடிக்கைகளால் அதிருப்திப்பட்டு விலகி இருந்தவர்கள்) வடக்கு கிழக்கு நிர்வாகத்தின் தலைவர் செயலாளர் ஆகியோரைச் சந்திக்க விரும்புவதாக கூறியிருந்தனர்” என கூறப்பட்டுள்ளது.

மேலும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் குழப்பம்: விளக்கமளித்த சங்கம் | North East Disappeared Person Relation Association

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் குழப்பம்: விளக்கமளித்த சங்கம் | North East Disappeared Person Relation Association

Share
தொடர்புடையது
14 7
இலங்கைசெய்திகள்

வடக்கில் காணிகள் விடுவிப்பின்போது பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படக்கூடாது! பொன்சேகா

வடக்கில் படை முகாம் அகற்றல் மற்றும் காணிகள் விடுவிப்பின்போது பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படாத வகையிலேயே முடிவுகள்...

13 9
இலங்கைசெய்திகள்

யாழில் பொலிஸ் உத்தியோகத்தருக்கு இடமாற்றம்!

யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமை புரிந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு...

11 7
இலங்கைசெய்திகள்

கல்குளம் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஐவர் கைது

அநுராதபுரம்-கல்குளம் அருகே நேற்று முன்தினம் (26) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஐவர் கைது...

12 10
இலங்கைசெய்திகள்

திங்கட்கிழமை நடைபெறவுள்ள விசேட நாடாளுமன்ற அமர்வு

எதிர்வரும் திங்கட்கிழமை(30) விசேட நாடாளுமன்ற அமர்வொன்று நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் ஹரிணி அமரசூரிய, குறித்த...