tamilni 370 scaled
உலகம்செய்திகள்

சமீபத்திய தேர்தலில் வெற்றி பெற்ற புலம்பெயர்தலுக்கெதிரான அரசியல்வாதி: பதவியேற்கும் முன்பே கைது வாரண்ட்

Share

சமீபத்திய தேர்தலில் வெற்றி பெற்ற புலம்பெயர்தலுக்கெதிரான அரசியல்வாதி: பதவியேற்கும் முன்பே கைது வாரண்ட்

ஜேர்மனியில் சமீபத்தில் நடந்துமுடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற புலம்பெயர்தலுக்கெதிரான அரசியல்வாதி ஒருவர் பதவியேற்கும் முன்பே, அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள், மக்கள் புலம்பெயர்தலை எதிர்க்கும் வலதுசாரிக் கட்சியினருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதைக் காட்டின.

அதனால், ஜேர்மன் அரசியலில் பெரும் அதிர்வலைகள் உருவாகின. ஆளுங்கட்சியினரே, புலம்பெயர்தலுக்கெதிராக நடவடிக்கைகளைத் துவங்க இருப்பதாக அறிவிக்கவேண்டிய ஒரு கட்டாயத்துக்கு ஆளானார்கள்.

சமீபத்திய தேர்தலில் வெற்றி பெற்ற அரசியல்வாதி பதவியேற்கும் முன்பே கைது வாரண்ட்
இந்நிலையில், சமீபத்திய தேர்தலில் வெற்றி பெற்றவரான வலதுசாரிக் கட்சி அரசியல்வாதி ஒருவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The Alternative for Germany Party (AfD) என்னும் வலதுசாரிக் கட்சியைச் சேர்ந்தவரான Daniel Halemba (22) என்னும் அரசியல்வாதிக்கு எதிராகத்தான் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், எதற்காக அவருக்கு எதிராக கைது வாரண்ட் என்பதை பொலிசார் தெரிவிக்கவில்லை. அவர் இதுவரை கைது செய்யப்படவும் இல்லை, சரணடையவும் இல்லை.

இன்னொரு விடயம் என்னவென்றால், அமைச்சர்கள் தண்டனை போன்ற விடயங்களிலிருந்து தப்பமுடிவும். ஆனால், Daniel இன்னமும் அமைச்சராக பதவியேற்கவில்லை. ஆகவே, அவர் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்வாரா, அல்லது கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...