tamilni 366 scaled
இலங்கைசெய்திகள்

பிரபல பாடகர்களை வரவழைத்து மொட்டுக்கட்சியை பலப்படுத்தும் ஒருங்கிணைப்பாளர்கள்

Share

பிரபல பாடகர்களை வரவழைத்து மொட்டுக்கட்சியை பலப்படுத்தும் ஒருங்கிணைப்பாளர்கள்

கடந்த சில மாதங்களாக இலங்கையில் பல்வேறு தரப்பினர் பிரபல பாடகர்களை இலங்கைக்கு வரவழைத்து மிகச்சிறப்பான முறையில் இசை நிகழ்ச்சிகளை நடாத்தி வரும் நிலையில், நேற்று (29-10-2023) சுகததாச உள்ளக அரங்கில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியின் பாடல்கள் மக்களை கவர்த்திருந்தன.

ஆனாலும் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் வருகையும், விற்பனையாகியிருக்கும் டிக்கட்களின் எண்ணிக்கையும் மிககுறைந்திருந்ததனையும் காணக்கூடியதாக இருந்தது.

இதற்கு பிரதான காரணங்கள் இரண்டு , மொட்டு கட்சியினை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான முன்னாயத்தங்களாக சிங்கள அரசியல்வாதிகளுடன் இணைந்து தமிழ் மக்களிடமிருந்து விளையாட்டுதுறைக்கு பணம் சேகரிப்பதற்காகவும், வளர்ந்து வரும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் வரவிருக்கும் நிகழ்ச்சிகளை சூழ்ச்சியான முறையில் தோற்கடித்து தமிழ் மக்களை திசை திருப்புவதற்குமாகவே அமைந்திருப்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன் பல வெற்றி நிகழ்ச்சிகளை நடாத்தி வந்த AARA Entertinment நிறுவனம் பல இன்னல்களுக்கு மத்தியில் எதிர்பார்த்த டிக்கெட் விற்பனையில் 50% குறைவான டிக்கட்டுகளே விற்பனையாகியிருக்கும் பட்சத்தில் 360 பாகையில் மேடை அமைக்கப்பெற்றிருக்கும் என்று விளம்பரம் செய்ததாகவும் பார்வையாளர்கள் விசனம் தெரிவித்தனர்.

அது மட்டுமன்றி பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் விருப்ப பாடல்கள் எத்தனையோ இருந்த போதிலும் அரசியல் பிரமுகர்களின் விருப்ப பாடல்களும், பார்வையாளர்களுக்கு இடையூறாகும் வகையில் இடைநடுவில் சிங்கள அரசியல்வாதிகளின் நடனங்களும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

அதுமாத்திரமன்றி, பார்வையாளர்களின் எண்ணிக்கையை கூட்டுவதற்காக நூற்றுக்கணக்கான இலவச டிக்கெட்டுகளை கொடுத்திருந்தனர் என்கிற தகவல்களும் வெளியாகியிருக்கிறது.

பல பிரபல பாடகர்களின் இசை நிகழ்ச்சியை எதிர்வரும் மாதங்களில் ஒழுங்கு செய்துக்கொண்டிருக்கும் AARA ENTERTINMENT இந்நிகழ்ச்சியில் பல்வேரு இன்னல்களை சந்தித்திருப்பது மட்டுமல்லாது இந்நிகழ்ச்சியை சரியான முன்னேட்பாடுகளின்றி செய்திருப்பதனால் எதிர்வரும் நிகழ்ச்சிகள் முன்னேட்பாடுகளுடன் நடைபெறுமா? இசையால் வாக்கு சேகரிப்பு இடம்பெறுமா? என்ற கேள்வி பர்வையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
articles2F0Nj1D1mrgD3fUv0MNcTa
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பல்கலைக்கழக சட்டத்தில் மாற்றம்: துறைத் தலைவர்களை நீக்கும் அதிகாரம் பேரவைக்கு! அதிபர் சேவை ஆட்சேர்ப்பிலும் விரிவான ஆய்வு.

பல்கலைக்கழகங்களின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் இலங்கை அதிபர் சேவையில் நிலவும் ஆட்சேர்ப்பு சிக்கல்கள் குறித்து, கல்வி...

NASA
செய்திகள்உலகம்

நிலவுக்கு உங்கள் பெயரை அனுப்ப ஓர் அரிய வாய்ப்பு: நாசாவின் புதிய திட்டத்தில் நீங்களும் இணையலாம்!

விண்வெளி ஆய்வில் ஆர்வமுள்ள பொதுமக்களின் பெயர்களை நிலவுக்கு அனுப்பும் #SendYourName எனும் உற்சாகமான திட்டத்தை அமெரிக்க...

1747723536 25 6828c2adaf2b1
செய்திகள்இலங்கை

ரயில்வே சேவையில் நெருக்கடி: கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 23 முதல் தொழிற்சங்க நடவடிக்கை!

நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள நிர்வாகச் சிக்கல்களை முன்வைத்து, எதிர்வரும் ஜனவரி 23-ஆம் திகதிக்குப் பின்னர் நாடு...

1731919585 Ravi L
செய்திகள்அரசியல்இலங்கை

அரசாங்கம் தேர்தலைக் காலம் தாழ்த்த முடியாது: ஐ.தே.க – ஐ.ம.ச கூட்டணி குறித்து ரவி கருணாநாயக்க முக்கிய தகவல்!

மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்தத் தவறினால், அது அரசாங்கத்தின் எதிர்காலப் பயணத்திற்குச் சிறந்ததல்ல எனப்...