tamilni 365 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பில் கொலைக் குற்றவாளியின் மகளுக்காக பிரம்மாண்ட விருந்து

Share

கொழும்பில் கொலைக் குற்றவாளியின் மகளுக்காக பிரம்மாண்ட விருந்து

இலங்கையில் முக்கியஸ்தர் ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியின் மகளுக்காக பெருந்தொகை செலவில் பாரிய விருந்து வைக்கப்பட்டுள்ளது.

புஸ்ஸா உயர்பாதுகாப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குற்றக் கும்பலைச் சேர்ந்த ஒருவரின் மகளின் பூப்புனித நீராட்டு விழாவே இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 23ஆம் திகதி இரவு கொண்டாட்டம் மற்றும் விருந்து வைபவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நிகழ்விற்காக அழகிய அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டுள்ளதுடன், நிகழ்விற்கு சுமார் 150-200 விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

வைபவத்தின் முடிவில், கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவின் இடதுபுறத்தில் அமைந்துள்ள ஹோட்டலுடன் கூடிய குடியிருப்பு வளாகத்தின் அறையில் மற்றொரு குழுவினர் மீண்டும் விருந்து நடத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...