rtjy 325 scaled
இலங்கைசெய்திகள்

20 ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு கோரும் அரச ஊழியர்கள்

Share

20 ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு கோரும் அரச ஊழியர்கள்

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் செ. துஷியந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – பட்டிருப்பு தேசிய பாடசாலையில் நேற்று(28.10.2023) இடம்பெற்ற இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளைக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், “கடந்த காலங்களை விட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் இருநூறு வீதத்திற்கும்மேல் உயர்ந்துள்ளது. உணவு, பானங்களின் விலைகள், எரிபொருள், பாடசாலை பேருந்து கட்டணம், பிள்ளைகளின் கல்வி, மருத்துவம், போக்குவரத்து, மின் கட்டணம், தண்ணீர் கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் அதிகரித்துள்ளன.

இவை தற்போதும் அதிகரித்துக் கொண்டுதான் வருகின்றன. புள்ளி விபரவியல் திணைக்களம் திரட்டிய தகவலின்படி 2023ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் இருந்து நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு ஒரு இலட்சத்து 2,421 ரூபா குறைந்தபட்ச செலவாக உள்ளது.

வாழ்க்கை செலவு அதிகரித்துள்ள நிலையில் குறைந்த பட்சம் அரச ஊழியர்கள் வாழ்வதற்காக 20 ஆயிரம் ரூபாய் நியாயமான சம்பள அதிகரிப்பை வேண்டி நிற்கின்றோம்” என தெரிவித்துள்ளார்.

இதன்போது கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்த முக்கிய தீர்மானங்களும் இங்கு நிறைவேற்றப்பட்டன.

இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கத்தின் தலைவரும் அபிவிருத்தி உத்தியோகத்தருமான எஸ்.லவகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சங்க பொதுச் செயலாளரும், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தருமான ஏ.புஹாது, நிதிச் செயலாளர் க.நடராஜா, தேசிய அமைப்பாளர் எஸ்.துஷியந்தன், உப தலைவர் கே.திருமாறன் உட்பட பெறுமளவான உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 21 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் முதல் வாகனங்களுக்குப் புதிய வரி! – அவசரப்பட்டு வாகனங்களை வாங்க வேண்டாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 சதவீத சமூக...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...