23 653c6b7091915
அரசியல்இலங்கைசெய்திகள்

நாமல் வீட்டில் குவிந்த அரசியல்வாதிகள்

Share

நாமல் வீட்டில் குவிந்த அரசியல்வாதிகள்

அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்துடன் அரசியல் களம் சூடுபிடித்துள்ளதாக அரசியல்மட்ட உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசேடமாக பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கைகளை வெளிப்படையாக விமர்சித்திருந்தார்.

இதனையடுத்து பொதுஜன பெரமுன கட்சி இரண்டு இடங்களில் ஒன்று கூடியது, அதில் ஒன்று மலலசேகர மாவத்தையில் உள்ள நாமல் ராஜபக்ஷவின் வீட்டிலாகும்.

இங்கு இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இது தவிர பல கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.

ன்றைய தினம் கொழும்பை சுற்றி தங்கியிருந்த நாடாளும்னற உறுப்பினர்கள் மற்றும் அரச அமைச்சர்கள் அனைவரும் இங்கு வந்தமை விசேட அம்சமாகும்.

இந்த சந்திப்பில் இராஜாங்க அமைச்சர்களே முதலில் பேசியுள்ளனர். எமக்கு செயலாளரைத் தருமாறு ஜனாதிபதியிடம் பலமுறை கூறியும் அவர் செவிசாய்க்கவில்லை. மக்களுக்கு வேலை செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஆனால் ஒரு செயலாளரும் எங்களுக்கான பணம் எவ்வளவு என்பதனை கூட சொல்ல மாட்டார்கள்.

மக்களுக்கு வேலை செய்வதற்குரிய வசதிகளை அவர்கள் வழங்குவதில்லை என்பது உண்மைதான். இவ்வாறான நிலையில் எப்படி மக்களைச் சென்றடைவது.

மேலும் தற்போது மின்சாரக் கட்டணம் பாரிய அளவு அதிகரித்துள்ளதால் வீதியில் இறங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதென இராஜாங்க அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

சலுகைகளை வழங்குமாறு கூறியும் ஜனாதிபதி எதனையும் கேட்பதில்லை என மற்றுமொரு இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் மக்களை சோர்வடையச் செய்துவிட்டது. மின்சாரக் கட்டணம் அதிகம், தண்ணீர்க் கட்டணம் அதிகம், தொழில் வல்லுநர்களின் சம்பளத்துக்கு வரி விதிக்கப்படுகிறது, மக்கள் மீது வரி விதிக்கப்படுகிறது என்று நாமல் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான தீர்வாக இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் சலுகைகள் வழங்கப்படுமா என மற்றொரு இராஜாங்க அமைச்சர் கவலை வெளியிட்டுள்ளார்.

நாட்டை கட்டியெழுப்ப 2048 வரை காத்திருக்க வேண்டுமா? குழந்தைகளுக்கு மதிய உணவு கொடுக்க 2030 வரை காத்திருக்க வேண்டுமா? மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கக் கோர வேண்டியுள்ளதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் ஆலோசனை பெறுவோம். மேலும், பசில் ராஜபக்ஷவுக்கும் தெரியப்படுத்துவோம் என நாமல் தெரிவித்தார்.

அரசாங்கம் கலைக்கப்படுவதாக வெளியான செய்திகள் வதந்தி. எனினும் நாங்கள் தேர்தலுக்குத் தயாராக இருக்கிறோம் எனவும் நாமல் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...