செய்திகள்
ரயில் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு!
ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று நள்ளிரவு முதல் இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 24 மணித்தியாலங்கள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்று இவ்வாறு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகள் தொழிற்சங்கத்தின் சுமேத சோமரட்ன தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login