செய்திகள்

பிரேசில் அதிபர் மருத்துவமனையில்…!!

Published

on

பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சன குடல் அடைப்பு நோயின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோவிற்கு, குடல் அடைப்பு காரணமாக இன்று சிகிச்சைக்காக சாவ் பாலோவில் உள்ள விலா நோவா ஸ்டார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஒரு நபர் போல்சனரோவை கத்தியால் அவரது வயிற்றில் குத்தினார். அதன்பிறகு 4 முறை வயிற்று அறுவை சிகிச்சைக்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்டது எனக் கூறப்படுகிறது.

இதற்கு முன்பு போல்சனரோவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் அன்டோனியோ லூயிஸ் மாசிடோ தற்போது அதிபர் போல்சனரோவுக்கு வயிற்றில் பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிரேசில் அதிபர் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகமோ அதிபர் மக்கள் தொடர்பு சேவையோ இதுவரை எந்த பதிலும தெரிவிக்கவில்லை.

#WorldNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version