உலகம்

உக்ரைனுக்கு F-16 போர் விமானங்களை வழங்க அமெரிக்கா ஒப்புதல்

Published

on

F-16 போர் விமானங்களை உக்ரைனுக்கு மாற்ற நெதர்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.

உக்ரைன் ராணுவத்திற்காக நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அதிநவீன போர் விமானம் அமெரிக்காவின் ஒப்புதலுடன் அந்நாட்டை வந்தடைகிறது.

இந்த வார தொடக்கத்தில் டச்சு மற்றும் டேனிஷ் தலைவர்களுக்கு எழுதிய கடிதத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அந்தோனி பிளிங்கன் இந்த இடமாற்றத்திற்கு ஒப்புதல் அளித்தார்.

டென்மார்க் மற்றும் நெதர்லாந்து விமானங்களை சொந்தமாக வைத்திருந்தாலும், இந்த விமானங்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்படுகின்றன. எனவே, டெலிவரி செய்ய வாஷிங்டனின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.

போர் தொடங்கியதில் இருந்து ஒரு வருடத்திற்கும் மேலாக ஜெட் விமானங்களை உக்ரைன் கேட்டு வந்தது.

டச்சு வெளியுறவு மந்திரி வோப்கே ஹோக்ஸ்ட்ரா, உக்ரைனுக்கு விமானங்களை வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்ததற்கு நன்றி தெரிவித்தார். “உக்ரைன் தங்கள் மக்களையும் நாட்டையும் பாதுகாக்க இது ஒரு முக்கியமான மைல்கல்” என்று ஹோக்ஸ்ட்ராக்ஸ் கூறினார்.

விமானம் டெலிவரி செய்யப்பட்டு போர்க்களத்தை அடைய பல மாதங்கள் ஆகலாம். உக்ரேனிய விமானிகளுக்கு இன்னும் F-16 களில் பயிற்சி தேவை. இந்த விமானம் அடுத்த வசந்த காலத்தில் அல்லது கோடையில் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டேனிஷ் அதிகாரிகள் மிகவும் மேம்பட்ட F-35 விமானங்களைப் பெற்ற பிறகு F-16 விமானங்களை மாற்றுவார்கள். முதல் நான்கு F-35 விமானங்கள் அக்டோபர் 1-ஆம் திகதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவிற்கு எதிரான போரின் தற்போதைய கட்டத்தில் F-16 வினங்கள் தேவையில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். 2022-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து கியேவின் பல கோரிக்கைகளை அமெரிக்கா நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version