ஏனையவை

எரிபொருள் வரிசை! – தொடரும் உயிரிழப்புகள்

Published

on

மக்கள் வரிசையில் காத்திருந்தே, செத்துமடியும் அவல நிலை இலங்கையில் உருவாகியுள்ளது என எதிரணிகள் சுட்டிக்காட்டிவரும் நிலையில், எரிபொருள் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

மீரிகமவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில், எரிபொருளை பெறுவதற்கு வரிசையில் நின்றிருந்தவர்களில் ஒருவரே இன்று இவ்வாறு மயங்கிவிழுந்து உயிரிழந்துள்ளார்.

எரிபொருள் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்து உயிரிழந்த மூன்றாவது நபர் இவர் ஆவார்.

சனிக்கிழமை, வத்தேகம- உட.தலவின்னவில் 71 வயதான நபர் ஒருவரும், நேற்று கடவத்தையில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் நின்ற 70 வயதுடைய நபரொருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version