மருத்துவம்

இயற்கையான முறையில் வயிற்றை சுத்தப்படுத்தனுமா? இந்த வழியை மட்டும் பின்பற்றுங்க

Published

on

வயிற்றை மாதம் ஒரு முறையாவது சுத்தம் செய்வது அவசியமானது ஆகும்.

வயிற்றை சுத்தம் செய்வதற்கு பலவித மருந்துகள் மாத்திரைகள் மருந்து கடைகளில் கிடைக்கிறது. அவற்றில் பல விதமான பக்க விளைவுகள் இருக்கின்றன

எனவே இவற்றை சரி செய்ய ஒரு சில இயற்கை வழிகள் உள்ளன. தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

செய்முறை

காலை எழுந்தவுடன் ஒரு பாத்திரத்தில் மூன்று லிட்டர் தண்ணீர் கொதிக்க வைக்கவும். பிறகு நன்கு கொதித்த அந்த தண்ணீரில், மூன்று எலுமிச்சை பழங்களை பிழிந்து விடுங்கள்.

அதனுடன் மூன்று ஸ்பூன் கல்உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். வெதுவெதுப்பாக வெறும் வயிற்றில் ஒரு அரை லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும். தண்ணீர் உள்ளே சென்ற சிறிது நேரத்தில் கழிவறை செல்லத் தூண்டும்.

இல்லையெனில், பத்து நிமிடம் கழித்து, மேலும் சிறிதளவு தண்ணீரை அருந்தவும். ஐந்து நிமிடங்களில் கழிவறை செல்வது நிச்சயம். சென்று வந்துடன், மீண்டும் எலுமிச்சை உப்பு நீர் கலவையை எவ்வளவு குடிக்க முடியுமோ அவ்வளவு குடிக்கலாம்.

சில நிமிடங்களில், மறுபடியும் மலம் கழியும். இதேபோல் நான்கு, ஐந்து முறை இந்த கலவையை முடிந்த அளவு அருந்தினால், அத்தனை முறையும் கழிவறை செல்வது நிச்சயம்.
நீர் அருந்துவதை நிறுத்தினால், மலம் கழிவது நின்றுவிடும். இந்த முறையில் வயிற்றை இயற்கையான முறையில் சுத்தம் செய்யப்படும். குடல் வலுப்பெறும். சாப்பிடும் உணவு உடம்பில் தங்கும். நன்கு செரிமானம் ஆகும்.
#StomachClean

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version