மருத்துவம்

இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் ஆபத்தாம்! எச்சரிக்கை

Published

on

பொதுவாக சில உணவு பொருட்களை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

அத்தகைய உணவு வகைகள் பற்றி பார்ப்போம்

  • வேகவைத்த முட்டையை அறையின் வெப்பநிலையில் நீண்ட நேரம் வைத்திருக்கும்போது அதில் சால்மோனெல்லா பாக்டீரியாக்கள் பெருக தொடங்கிவிடும். அதனால் முட்டையை சமைத்த உடனே சாப்பிடுவதுதான் நல்லது.
  • பீட்ரூட்டை தொடர்ந்து சூடுபடுத்தி சாப்பிட்டுவந்தால் புற்றுநோய் உருவாகுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.
  • உருளை கிழங்கை சமைத்தவுடன் சாப்பிடுவதுதான் நல்லது. ஏனெனில் சமைத்த உருளைக்கிழங்கு குளிர்ச்சி அடையும்போது அதில் குளோஸ்டிரிடியம் போட்டுலிசம் எனும் பாக்டீரியா பரவும். அது உடல்நலக்கோளாறுக்கு வித்திடும்.
  • சமைத்த கோழி இறைச்சியிலும் சால்மோனெல்லா பாக்டீரியா பெருக தொடங்கும். அதனால் இறைச்சியை நீண்ட நேரம் வைத்திருக்கக்கூடாது. சூடுபடுத்தி சாப்பிடவும் கூடாது.
  • எண்ணெய்யில் தயார் செய்த பலகாரங்களை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. மீண்டும் சூடுபடுத்தும்போது பலகாரங்களில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நீங்கிவிடும். மேலும் எண்ணெய்யை மீண்டும் சூடேற்றும்போது அது நச்சு நீராவியை வெளியிடும். அதனால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படக் கூடும்.
  • கடல் உணவுகளை சமைத்த ஒரு மணி நேரத்திற்குள் சாப்பிட வேண்டும். நேரம் ஆக ஆக கடல் உணவில் விஷத்தன்மை ஏற்படக்கூடும். அதனால் மீண்டும் சூடுபடுத்தியும் சாப்பிடக்கூடாது.
  • கீரை வகைககளில் நைட்ரேட் அதிகம் கலந்திருக்கும். அதனை மீண்டும் சூடுபடுத்தும்போது நைட்ரேட் கார்சினோஜெனிக் நைட்ரோசமைன்களாக மாறி அது புற்றுநோய் ஏற்படுவதற்கு காரணமாகிவிடும்.

#Food #Health Tips

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version