மருத்துவம்

செவ்வாழைப்பழத்தை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றதா?

Published

on

நாம் பழங்களில் அதிகம் சாப்பிடக்கூடிய பழம் வாழை பழம்.

இந்த வாழைப்பழத்தில் பல வகைகள் உள்ளது. இருப்பினும் செவ்வாழை பழத்தில் தான் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது.

பொட்டாசியம், மக்னீஷியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி, தையமின், ஃபோலிக் ஆசிட், பீட்டா கரோட்டின் போன்றவை அடங்கியுள்ளது.

இதனை தினமும் சாப்பிடுவதனால் உடலுக்கு பல நன்மைகளை தருகின்றது.

  • தினமும் செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், சுறுசுறுப்பு நம்மிடம் அதிகரிக்கும், சோர்வை நீக்கும்.
  • செவ்வாழைப்பழத்தை அதிகமாக சாப்பிடுவதால் வாயில் ஏற்படும் தூர்நாற்றத்தை தடுக்கிறது. மேலும், பல் சொத்தை, பற்களில் ரத்த கசிவு, ஈறுகளில் வீக்கம் ஆகியவற்றை குணமாக்குகிறது.
  • கர்ப்பிணி பெண்கள் தினமும் இப்பழத்தை சாப்பிட்டு வருவதால், அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நன்மைகளை அளிக்கிறது.
  • செவ்வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ அதிகமாக நிறைந்துள்ளதால், கண்களில் ஏற்படும் கண்புரை தடுக்கிறது. மேலும் கருவிழி, விழிப்படலம் ஆகியவற்றை ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. மாலைக்கண் நோயில் இருந்து நம்மை பாதுக்காக்கிறது.
  • தினமும் காலையில் செவ்வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு ஏற்படாது. மலச்சிக்கல், மூல நோய் போன்றவை குணமாக தினமும் தினமும் செவ்வாழைப்பழத்தை சாப்பிட வேண்டும்.
  • செவ்வாழைப்பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் தன்மை அதிகமாக நிறைந்துள்ளது. மனிதர்களை தொற்றும் தொற்று நோய்களை அழிக்கும் சக்தியை கொண்டது.

#HealthTips #EyeProblem #DentalProblem

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version