<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Train Strike &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/train-strike/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Tue, 12 Dec 2023 03:35:41 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Train Strike &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>நிறுத்தப்படும் வடக்கிற்கான தொடருந்து சேவைகள்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/terminated-northbound-train-service/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sun, 10 Dec 2023 08:26:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[colombo]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[Terminated Northbound Train Service]]></category>
		<category><![CDATA[Train Strike]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=108982</guid>

					<description><![CDATA[நிறுத்தப்படும் வடக்கிற்கான தொடருந்து சேவைகள் கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான தொடருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு தொடருந்து மார்க்கத்தின் நவீனமயமாக்கல் நடவடிக்கை காரணமாக இவ்வாறு சேவைகள் இடைநிறுத்தப்படவுள்ளன. வடக்கு தொடருந்து பாதையின் மஹவ மற்றும் ஓமந்தை வரையிலான நவீனமயமாக்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, 07.01.2024 அன்று மஹவ மற்றும் அநுராதபுரத்திற்கு இடையிலான வீதி நவீனமயமாக்கல் பணிகள் ஆரம்பிக்கப்படுவதால், ஜனவரி 07 ஆம் திகதியிலிருந்து 06 மாத காலத்திற்கு தற்காலிகமாக [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>நிறுத்தப்படும் வடக்கிற்கான தொடருந்து சேவைகள்</h4>
<p><a href="https://tamilnaadi.com/news/local/2023/11/27/colombo-university-student-death-in-accident/">கொழும்பு</a> கோட்டையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கும் <a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88" target="_blank" rel="noopener">காங்கேசன்துறை</a>க்கும் இடையிலான தொடருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.</p>
<p>வடக்கு தொடருந்து மார்க்கத்தின் நவீனமயமாக்கல் நடவடிக்கை காரணமாக இவ்வாறு சேவைகள் இடைநிறுத்தப்படவுள்ளன.</p>
<p>வடக்கு தொடருந்து பாதையின் மஹவ மற்றும் ஓமந்தை வரையிலான நவீனமயமாக்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, 07.01.2024 அன்று மஹவ மற்றும் அநுராதபுரத்திற்கு இடையிலான வீதி நவீனமயமாக்கல் பணிகள் ஆரம்பிக்கப்படுவதால், ஜனவரி 07 ஆம் திகதியிலிருந்து 06 மாத காலத்திற்கு தற்காலிகமாக மஹவ மற்றும் அநுராதபுரத்திற்கும் இடையிலான தொடருந்து சேவைகள் இடம்பெறாது என பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதன்படி, ஜனவரி 07ஆம் திகதி முதல் வடக்கு ரயில் மாரக்கத்தின் கொழும்பு கோட்டையில் இருந்து மஹவ வரையிலும், காங்கேசன்துறையில் இருந்து அனுராதபுரம் வரையிலும் மட்டுமே தொடருந்து சேவைகள் இடம்பெறும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தொடருந்து சேவைகள் வழமைக்கு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/discontinuance-of-train-services-update/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 06 Oct 2023 01:27:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Department of Railways]]></category>
		<category><![CDATA[Discontinuance Of Train Services Update]]></category>
		<category><![CDATA[Sri Lanka Railways]]></category>
		<category><![CDATA[Train Strike]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=97561</guid>

					<description><![CDATA[தொடருந்து சேவைகள் வழமைக்கு தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தினரின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் தொடருந்து சேவைகள் வழமைக்கு திரும்பும் என தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், அலுவலக தொடருந்து சேவைகள் இன்று மாலை வழமைபோல முன்னெடுக்கப்படுமென அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. மாளிகாவத்தை தொடருந்து சாலையின் பிரதி கட்டுப்பாட்டாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று காலை முதல் தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்திருந்தனர். இந்தநிலையில், போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவுடன் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>தொடருந்து சேவைகள் வழமைக்கு</h4>
<p><a href="https://tamilnaadi.com/news/local/2023/09/27/train-accident-in-colombo-srilanka/">தொடருந்து</a> கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தினரின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் தொடருந்து சேவைகள் வழமைக்கு திரும்பும் என தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.</p>
<p>எவ்வாறாயினும், அலுவலக தொடருந்து சேவைகள் இன்று மாலை வழமைபோல முன்னெடுக்கப்படுமென அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.</p>
<p><a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88" target="_blank" rel="noopener">மாளிகாவத்தை</a> தொடருந்து சாலையின் பிரதி கட்டுப்பாட்டாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று காலை முதல் தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்திருந்தனர்.</p>
<p>இந்தநிலையில், போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவுடன் நேற்று முற்பகல் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், ஏற்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமைய, குறித்த பணிப்புறக்கணிப்பை கைவிடுவதாக தொடருந்து கட்டுப்பாட்டாளர் சங்கம் அறிவித்துள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் தொடருந்து சேவை</title>
		<link>https://tamilnaadi.com/news/local/bandula-gunawardena/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 12 Sep 2023 11:23:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Bandula Gunawardena]]></category>
		<category><![CDATA[Department of Railways]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Railways]]></category>
		<category><![CDATA[Sri Lanka Railways]]></category>
		<category><![CDATA[Sri Lankan Peoples]]></category>
		<category><![CDATA[Train Strike]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=93761</guid>

					<description><![CDATA[அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் தொடருந்து சேவை இன்று (12) நள்ளிரவு முதல் தொடருந்து சேவை அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், இது தொடர்பான யோசனை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவித்தார். இதன்மூலம் நாளை (13.09.2023) முதல் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் தவிர்க்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். தொடருந்து இயக்குநர்கள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுத்து [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் தொடருந்து சேவை</h4>
<p>இன்று (12) நள்ளிரவு முதல் தொடருந்து சேவை அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் என அமைச்சர் <a href="https://tamilnaadi.com/news/2021/08/26/the-price-of-rice-cannot-be-increased/">பந்துல குணவர்தன</a> தெரிவித்துள்ளார்.</p>
<p>அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், இது தொடர்பான யோசனை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவித்தார்.</p>
<p>இதன்மூலம் நாளை (13.09.2023) முதல் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் தவிர்க்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.</p>
<p>தொடருந்து இயக்குநர்கள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுத்து வரும் <a href="https://tamilnaadi.com/news/local/2023/03/14/strike-from-midnight/">பணிப்புறக்கணிப்பு</a> காரணமாக பல தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>இன்றைய தினத்தின் (12.09.2023) இதுவரையான 10 இற்கும் அதிகமான அலுவலக மற்றும் ஏனைய தொடருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.</p>
<p>இதனால் சேவைகளை பெற்றுக் கொள்வதில் மக்களுக்கு பெரும் அசௌகரியம் ஏற்பட்டுள்ளது.</p>
<p>சுமார் 5 வருடங்களாக நடைபெறாத தரம் உயர்வை விரைவுபடுத்துமாறு விடப்பட்ட கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்காத காரணத்தினால் குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.</p>
<p>இந்த நிலையில் நேற்றிரவு தொடருந்து இயக்குநர்கள் சங்கத்திற்கும், தொடருந்து முகாமையாளருக்கும் இடையில் அவசர பேச்சுவார்த்தை ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.</p>
<p>எனினும் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தமையினால், நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதற்கு<a href="https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81" target="_blank" rel="noopener"> தொடருந்து இயக்குநர்கள் சங்கம்</a> தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தொடருந்து தொழிற்சங்கத்தால் நாளை வேலை நிறுத்த போராட்டம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/a-railway-union-is-on-strike-tomorrow/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 11 Sep 2023 08:04:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[A Railway Union Is On Strike Tomorrow]]></category>
		<category><![CDATA[Department of Railways]]></category>
		<category><![CDATA[Sri Lanka Railways]]></category>
		<category><![CDATA[Train Strike]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=93587</guid>

					<description><![CDATA[தொடருந்து தொழிற்சங்கத்தால் நாளை வேலை நிறுத்த போராட்டம் தொடருந்து இன்ஜின் செயற்பொறியாளர் சங்கமானது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளது. குறித்த பணிப்புறக்கணிப்பை நாளை(12.09.2023) முன்னெடுக்கவுள்ளதாக தொடருந்து இன்ஜின் செயற்பொறியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் தொடருந்து அதிகார சபைக்கு அறிவித்து இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தர அடிப்படையில் பதவி உயர்வுகளை விரைவுபடுத்த நீண்ட நாள் கோரிக்கை விடுத்தும் 5 ஆண்டுகளாக தாமதமாகி வரும் நிலையில் தீர்வு கிடைக்காததால் இன்ஜின் இயக்க பொறியாளர்கள் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>தொடருந்து தொழிற்சங்கத்தால் நாளை வேலை நிறுத்த போராட்டம்</h4>
<p>தொடருந்து இன்ஜின் செயற்பொறியாளர் சங்கமானது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளது.</p>
<p>குறித்த பணிப்புறக்கணிப்பை நாளை(12.09.2023) முன்னெடுக்கவுள்ளதாக தொடருந்து இன்ஜின் செயற்பொறியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.</p>
<p>மேலும் தொடருந்து அதிகார சபைக்கு அறிவித்து இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக <a href="https://tamilnaadi.com/news/local/2023/08/21/important-notice-for-tricycle-riders/">தொழிற்சங்கம்</a> தெரிவித்துள்ளது.</p>
<p>இந்நிலையில் தர அடிப்படையில் பதவி உயர்வுகளை விரைவுபடுத்த நீண்ட நாள் கோரிக்கை விடுத்தும் 5 ஆண்டுகளாக தாமதமாகி வரும் நிலையில் தீர்வு கிடைக்காததால் இன்ஜின் இயக்க பொறியாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவுத்துள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
