<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Nothern Province &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/nothern-province/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Wed, 07 May 2025 08:21:39 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Nothern Province &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி &#8211; ரணில் விக்ரமசிங்க</title>
		<link>https://tamilnaadi.com/news/local/anura-kumara-dissanayaka-35/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Wed, 07 May 2025 08:21:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura Kumara Dissanayaka]]></category>
		<category><![CDATA[Local government Election]]></category>
		<category><![CDATA[Nothern Province]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=196472</guid>

					<description><![CDATA[எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்த போதே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக கொழும்புக்கு இது போன்ற ஒன்றைச் செய்திருக்க வேண்டும் என்று கூறிய ரணில் விக்ரமசிங்க, தான் சொன்னது போல் எதிர்க்கட்சிகள் ஒன்றுபடாததால் மக்கள் பிளவுபட்டுள்ளனர் என்றார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, நாங்கள் யானை சின்னத்தின் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.</p>
<p>உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்த போதே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>குறிப்பாக கொழும்புக்கு இது போன்ற ஒன்றைச் செய்திருக்க வேண்டும் என்று கூறிய ரணில் விக்ரமசிங்க, தான் சொன்னது போல் எதிர்க்கட்சிகள் ஒன்றுபடாததால் மக்கள் பிளவுபட்டுள்ளனர் என்றார்.</p>
<p>ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, நாங்கள் யானை சின்னத்தின் கீழ் போட்டியிட்டோம். இதை ஒரு தொடக்கமாகக் கருதலாம்.</p>
<p>சில பகுதிகளில் முடிவுகள் நன்றாக உள்ளன. நாம் திருப்தி அடையலாம். இப்போது ஐக்கிய தேசியக் கட்சி வேலை செய்ய வேண்டும்.</p>
<p>இப்போது எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி மக்களுக்கு ஏதாவது ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும். நான் தேர்தல் பிரச்சாரப் பணிகளில் பங்கேற்கவில்லை.</p>
<p>இது இளம் தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது ஒரு பரீட்சார்த்த நடவடிக்கை. இதில் நல்ல விஷயங்களும் உள்ளன, தோல்விகளும் உள்ளன.</p>
<p>தற்போது நம்மிடம் உள்ள பலத்தைக் கொண்டு எப்படி முன்னேறுவது என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.</p>
<p>யானை சின்ன வேட்பாளர் என பரிந்துரைக்கப்படும் போது மக்கள் வாக்களிக்க வருவார்கள் என்று சிலர் கூறினர்.</p>
<p>யானை சின்ன வேட்பாளர் என்பதால் மட்டும் மக்கள் வாக்களிக்க வரமாட்டார்கள் என்று இப்போது தெரிகிறது. இப்போது நாம் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை அறிமுகப்படுத்த வேண்டும். இதற்குப் பிறகு, இளைய தலைமுறையினர் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு முன்னேற வேண்டும். என்றார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வடக்கில் தோல்வியை தழுவிய அநுர கட்சி : காரணத்தை அம்பலமாக்கும் முன்னாள் முதலமைச்சர்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/reason-for-anura-s-defeat-in-north-2/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Wed, 07 May 2025 08:21:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura Kumara Dissanayaka]]></category>
		<category><![CDATA[C. V. Vigneswaran]]></category>
		<category><![CDATA[Local government Election]]></category>
		<category><![CDATA[Nothern Province]]></category>
		<category><![CDATA[Reason For Anura S Defeat In North]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=196470</guid>

					<description><![CDATA[வட மாகாண மக்களுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படாமையினாலேயே, உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அரசாங்கம் வடக்கில் கடும் தோல்வி அடைந்துள்ளதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி. வி.விக்னேஸ்வரன் (C. V. Vigneswaran) தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். பொய்யான வாக்குறுதிகளே வடக்கு மற்றும் கிழக்கில் அரசினால் வெற்றியை பெற முடியாமல் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கடந்த முறை வடக்கில் தமிழ் கட்சிகளுக்குள் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>வட மாகாண மக்களுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படாமையினாலேயே, உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அரசாங்கம் வடக்கில் கடும் தோல்வி அடைந்துள்ளதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி. வி.விக்னேஸ்வரன் (C. V. Vigneswaran) தெரிவித்துள்ளார்.</p>
<p>அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>பொய்யான வாக்குறுதிகளே வடக்கு மற்றும் கிழக்கில் அரசினால் வெற்றியை பெற முடியாமல் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கடந்த முறை வடக்கில் தமிழ் கட்சிகளுக்குள் பிரச்சினை இருந்தமையினால் அரசாங்கத்திற்கு இலகுவாக நுழைய கூடிய வகையிலான சூழல் காணப்பட்டது.</p>
<p>எனினும் இம்முறை தமிழ் கட்சிகளுக்குள் மாற்றங்கள் இருந்தாலும் அரசாங்கத்திற்கு வாக்களிக்க கூடானதென தமிழ் மக்கள் நினைத்துள்ளனர். அரசியல் கட்சிகளும் மக்களிடம் கேட்டுக்கொண்டது.</p>
<p>அரசாங்கம் முன்பு வழங்கிய வாக்குறுதிகள் ஒன்றையும் நிறைவேற்றவில்லை. சிறையில் இருப்பவர்கள் விடுவிப்பதாக கூறிய போதிலும் இதுவரையில் விடுவிக்கவில்லை.</p>
<p>காணிகள் கையகப்படுத்தப்படாதென கூறப்பட்டது. எனினும் திணைக்களால் மக்களின் காணிகள் தொடர்ந்து கையகப்படுத்தப்பட்டு வருகின்றது. இராணுவம் குறைப்படும் என கூறிட்டு அங்கும் இங்கும் சிலரை மாத்திரம் குறைத்து விட்டு அதிகளவில் அழைத்துவரப்பட்டுள்ளனர்.</p>
<p>முல்லைத்தீவில் 2 பொது மக்களுக்கு ஒரு இராணுவம் என்ற கணக்கில் உள்ளனர். அவ்வாறான நிலையில் தற்போதைய அரசாங்கத்தின் கொள்ளைகளும் முன்பு இருந்த அரசாங்கத்தின் கொள்ளைகளிலும் மாற்றம் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.</p>
<p>இதன் காரணமாகவே இம்முறை அரசாங்கத்திற்கு இந்த மக்களின் ஆதரவு பெரிய அளவில் கிடைக்கவில்லை. வடக்கு கிழக்கு மக்கள், சிங்கள மக்களுடன் நல்ல உறவில் தான் உள்ளனர். எனினும் எங்களுக்கு என்று உரிமை உள்ளது.</p>
<p>இதனால் தமிழ் மக்கள் என்ற ரீதியின் தமிழர்களின் இடத்தை நிர்வகிக்க எங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்பதனையே நாங்கள் கோருகின்றோம்.</p>
<p>தான் முதலமைச்சராக இருந்த காலத்தில் வட மாகாணத்திற்கு அரசாங்கத்தினால் மிகச் சிறிய தொகை ஒன்றே வழங்கப்பட்டது. 12 ஆயிரம் மில்லியன் ரூபாய் கேட்டோம். ஆனால் 1600 மில்லியன் ரூபாயே வழங்கப்பட்டது.</p>
<p>சிங்கள பெரும்பான்மை கொண்ட அரசாங்கத்தினால் எங்களுக்கு எவ்வித உரிமையும் வழங்கப்படாமல் உள்ளது.</p>
<p>இதனாலேயே எங்கள் மக்கள் இதனை சுட்டிக்காட்டி தமிழ் கட்சிகளுக்கு வாக்களித்துள்ளனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வடக்கை உலுக்கும் எலிக் காய்ச்சல் : விலங்குகளிலும் பரவக் கூடிய சாத்தியம் உள்ளதாக தகவல்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/jaffna-rat-fever-can-spread-to-animals/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Thu, 19 Dec 2024 11:50:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[Nothern Province]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=182686</guid>

					<description><![CDATA[வடக்கை உலுக்கும் எலிக் காய்ச்சல் : விலங்குகளிலும் பரவக் கூடிய சாத்தியம் உள்ளதாக தகவல் வடக்கு மாகாணத்தில் பரவியுள்ள லெப்டோஸ்ப்ரைசிஸ் எனப்படும் எலிக் காய்ச்சல் நோயானது மனிதர்கள் உள்ளிட்ட விலங்குகளிலும் பரவக் கூடிய சாத்தியம் உள்ளதாக வட மாகாண கால்நடை சுகாதார உற்பத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.வசீகரன் (S. Vaseegaran) தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் (Jaffna) &#8211; திருநெல்வேலியில் (Tirunelveli) உள்ள கால்நடை சுகாதார உற்பத்தி திணைக்களத்தில் இன்று (19.12.2024) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>வடக்கை உலுக்கும் எலிக் காய்ச்சல் : விலங்குகளிலும் பரவக் கூடிய சாத்தியம் உள்ளதாக தகவல்</h4>
<p><a href="https://tamilnaadi.com/entertainment/cinema/2024/12/11/douglas-issues-allowing-indian-trawlers-north-sea/">வடக்கு</a> மாகாணத்தில் பரவியுள்ள லெப்டோஸ்ப்ரைசிஸ் எனப்படும் எலிக் காய்ச்சல் நோயானது மனிதர்கள் உள்ளிட்ட விலங்குகளிலும் பரவக் கூடிய சாத்தியம் உள்ளதாக வட மாகாண கால்நடை சுகாதார உற்பத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.வசீகரன் (S. Vaseegaran) தெரிவித்துள்ளார்.</p>
<p>யாழ்ப்பாணம் (Jaffna) &#8211; திருநெல்வேலியில் (Tirunelveli) உள்ள கால்நடை சுகாதார உற்பத்தி திணைக்களத்தில் இன்று (19.12.2024) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இந்நோயானது லெப்றரோஸ்பைரா எனப்படும் ஒரு வகை பாக்டீரியாவினால் ஏற்படுத்தப்படுகின்ற தொற்று நோயாகும்.</p>
<p>இந்நோயினால் பாதிக்கப்பட்ட எலிகளின் சிறுநீரில் இப்பாக்டீரியாக்கள் வாழும். எலியின் சிறுநீர் மற்றும் மலம் மூலம் வெளியேறும் இந்த பாக்டீரியாவானது மழைக் காலங்களில் மழைநீர் மற்றும் வெள்ளத்தில் கலந்து பரவ வாய்ப்புள்ளது.</p>
<p>மழைக் காலங்களில் குடி நீர்க்கிணறுகளில் கூட தொற்றுக் கிருமிகள் கலக்கக்கூடும். தொற்றடைந்த நீரைப் பருகுவதாலோ அன்றி காயமுற்ற தோல், கண், வாய் போன்ற பகுதிகளில் தொடுகை உறும் வேளைகளில் இந்த பாக்றீரியாக்கள் உடலுள் ஊடுருவிச் செல்லும் வாய்ப்புள்ளது.</p>
<p>இதுவே எமது உடலில் எலிக்காய்ச்சல் பரவ பிரதான காரணமாக உள்ளன. குறித்த லெப்டோஸ்ப்ரைசிஸ் எனப்படும் பாற்றீரியாக்கள் நாய், ஆடு, மாடு, பன்றி போன்ற வளர்ப்பு விலங்குகளில் பரவக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக வடக்கு மாகாண கால்நடை சுகாதார உற்பத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் வைத்தியர் எஸ்.வசீகரன் குறிப்பிட்டுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>யாழில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம்: மூவர் கைது</title>
		<link>https://tamilnaadi.com/news/local/violence-in-jaffna-3-arrested-2-bikes-seized/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sun, 18 Aug 2024 07:15:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[Nothern Province]]></category>
		<category><![CDATA[Sri Lanka police]]></category>
		<category><![CDATA[Sri Lanka Police Investigation]]></category>
		<category><![CDATA[Violence In Jaffna 3 Arrested 2 Bikes Seized]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=158800</guid>

					<description><![CDATA[யாழில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம்: மூவர் கைது யாழ்ப்பாணம் (Jaffna) &#8211; வல்வெட்டித்துறையில் வீடொன்றுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் காளிங்க ஜெயசிங்கவின் உத்தரவுக்கமைய யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்புப்பிரிவு காவல்துறையினரால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைது நடவடிக்கை தொடர்பில் மேலும் தெரியவருகையில், அண்மையில் இரண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற ஆறு பேர் வல்வெட்டித்துறை காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றுக்குள் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>யாழில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம்: மூவர் கைது</h4>
<p><a href="https://tamilnaadi.com/news/local/2024/08/03/new-flight-service-between-chennai-jaffna-indigo/">யாழ்ப்பாணம்</a> (Jaffna) &#8211; வல்வெட்டித்துறையில் வீடொன்றுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>யாழ் மாவட்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் காளிங்க ஜெயசிங்கவின் உத்தரவுக்கமைய யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்புப்பிரிவு காவல்துறையினரால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>கைது நடவடிக்கை தொடர்பில் மேலும் தெரியவருகையில், அண்மையில் இரண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற ஆறு பேர் வல்வெட்டித்துறை காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.</p>
<p>குறித்தச் சம்பவத்தினால், மூன்று இலட்சம் வரையான பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக 19 மற்றும் 23 வயதான கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 2 பேரும் அச்சுவேலியைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>காவல்துறை விசாரணையின் போது துபாயில் இருந்து வீட்டை தாக்க உத்தரவு கிடைத்ததாகவும் அதற்கமைய கூலிப்படையாக குறித்த வன்முறையில் ஈடுபட்டுள்ளதாகதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது</p>
<p>சந்தேக நபர்களிடமிருந்து ஜந்து வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் வன்முறைக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் மீட்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விவகாரம்: சமூக ஆர்வலர்கள் விசனம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/chavakachcheri-hospital-issues-people-resistance/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 08 Jul 2024 14:58:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Chavakachcheri Hospital Issues People Resistance]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Hospitals in Sri Lanka]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[Nothern Province]]></category>
		<category><![CDATA[Sri Lankan Peoples]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=150157</guid>

					<description><![CDATA[சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விவகாரம்: சமூக ஆர்வலர்கள் விசனம் பாரிய குற்ற தன்மையற்ற ஒரு செயற்பாடு தொடர்பான முறைப்பாட்டுக்கு உடனடி விசாரணை அழைப்பு விடும் பொலிஸார் தொடர்பில் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியாக கடமையில் உள்ள இராமநாதன் அர்ச்சுனா மீதான முறைப்பாடொன்றின் பிரகாரம் அவரை நேற்று (07.07.2024) இரவு 8 மணிக்கு விசாரணைக்கு வருமாறு எழுத்து மூலமான அறிவுறுத்தலை பொலிஸார் வழங்கியிருந்தனர். அவ்வாறு, வர தவறும் போது நீதிமன்ற நடவடிக்கைக்கு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விவகாரம்: சமூக ஆர்வலர்கள் விசனம்</h4>
<p>பாரிய குற்ற தன்மையற்ற ஒரு செயற்பாடு தொடர்பான முறைப்பாட்டுக்கு உடனடி விசாரணை அழைப்பு விடும் பொலிஸார் தொடர்பில் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.</p>
<p>யாழ். <a href="https://tamilnaadi.com/news/local/2024/07/09/new-doctor-appointed-for-chavakachcheri/">சாவகச்சேரி</a> ஆதார வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியாக கடமையில் உள்ள இராமநாதன் அர்ச்சுனா மீதான முறைப்பாடொன்றின் பிரகாரம் அவரை நேற்று (07.07.2024) இரவு 8 மணிக்கு விசாரணைக்கு வருமாறு எழுத்து மூலமான அறிவுறுத்தலை பொலிஸார் வழங்கியிருந்தனர்.</p>
<p>அவ்வாறு, வர தவறும் போது நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார் என்றும் அதற்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ள இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் சட்டப்பிரிவுகளையும் அந்த எழுத்து மூலமான அறிவுறுத்தல் ஆவணத்தில் சுட்டிக்காட்டியிருந்தனர்.</p>
<p>இந்த அணுகுமுறையில் பொலிஸார் செயற்பட்டு வருகின்றமை இயல்பானது என்றால் நாட்டில் குற்றச்செயல்கள் குறைந்து சென்றிருக்க வேண்டும். எனினும் நாளுக்கு நாள் குற்றச்செயல்கள் நடந்தவாறே இருக்கின்றன.</p>
<p>குறிப்பாக வடக்கில் ஒரு முறைப்பாடு கிடைத்ததும் அதற்கு இரவுவேளை என்றும் பாராது உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்க முயற்சித்திருப்பது பாராட்டத்தக்கது.</p>
<p>ஆயினும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி மீதான முறைப்பாட்டுக்கு இவ்வாறு நடந்து கொள்வது பொலிஸார் பக்கச்சார்பற்று இயங்குவதாக தெரியவில்லை என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p>
<p>முறைகேடுகள் நடந்ததாக வலியுறுத்தப்பட்டு வருவதோடு பொதுமக்களும் வைத்திய அதிகாரியின் செயற்பாடுகள் தொடர்பில் அதனை வரவேற்று அவருக்கு ஆதரவளித்து வரும் ஒரு சூழலில் அந்த வைத்திய அதிகாரிக்கு எதிரான முறைப்பாடு தொடர்பில் இவ்வளவு விரைவு காட்டப்படுவது ஏன் என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியாதுள்ளது.</p>
<p>பல முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு கால தாமதமாவதோடு இலங்கை நீதிமன்றங்களில் வழக்குகள் நீண்ட காலதாமதங்களை சந்திக்கின்றதும் நடைமுறையாக இருக்கின்றதனையும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.</p>
<p>வழக்கு தாக்கல் செய்யப்படாது நீண்ட நாட்களாக தடுத்து வைக்கப்படும் தமிழர்கள் தொடர்பிலும் சுட்டிக்காட்டியிருந்தனர்.</p>
<p>எனினும், வைத்திய அதிகாரிக்கு எதிரான முறைப்பாட்டுக்கு மட்டும் அவர் இவ்வளவு விரைவாக விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பது ஆச்சரியமானது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p>
<p>சட்ட வரை முறையை மீறும் யாரொருவருக்கும் எதிராக செய்யப்படும் முறைப்பாடுகளுக்கு உடனடியாக சட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸார் இது போல் விரைவாக செயற்படுவார்களானால் நாட்டில் குற்றச்செயல்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விடும்.</p>
<p>ஒரு குறித்த நபர் மீது முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்படும் போது அது தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதற்காக முறைப்பாட்டில் குறிக்கப்பட்ட நபருக்கு பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்படும்.</p>
<p>அவ்வாறு அழைக்கப்பட்டவர் பொலிஸ் நிலையம் வருவதற்கு கால அவகாசம் வழங்கப்படும். ஒரு இரவுப் பொழுதில் முறைப்பாடு கிடைக்கும் போது விசாரணைகள் அடுத்த நாளின் பகல் பொழுதில் தான் நடைபெறும். இந்த நடைமுறை சாதாரண பொதுமக்கள் தொடர்பில் இருந்து வரும் வழமை.</p>
<p>அரச உயரதிகாரி ஒருவர் தான் பொறுப்பேற்ற ஆதார வைத்தியசாலையில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக சுட்டிக் காட்டுகின்றார். தற்போதுள்ள ஒழுங்கமைப்புக்களில் குறைபாடுகள் உள்ளதாக சுட்டிக்காட்டி அவற்றை சீரமைத்துக்கொள்ள முயற்சிக்கின்றார்.</p>
<p>நிர்வாகச் செயற்பாட்டை இலகுவாக்கும் முறையில் செயற்பட முற்பட்ட வேளை, அங்குள்ள ஊழியர்கள் மற்றும் பொறுப்பதிகாரிக்கு கீழ் நிலையில் உள்ள அதிகாரிகள் உள்ளிட்ட பணியாளர்கள் கட்டுப்பட்டுச் செயற்பட வேண்டிய ஒரு சூழலில் பொறுப்பு வைத்திய அதிகாரி வந்து தன் பணிகளை ஆரம்பித்த ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து குழப்ப நிலையை தோற்றுவிக்கின்றனர்.</p>
<p>சட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு வாய்ந்த நிறுவனமாக பொலிஸ் திணைக்களம் இருக்கின்றது.</p>
<p>சட்டங்களை இரு முறைகளில் நடைமுறைப்படுத்தி கொள்ள முடியும். ஒன்று முறைப்பாட்டாளரை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் விசாரணைகளை அடிப்படையாக வைத்து சட்ட மீறல்களை கட்டுப்படுத்த முடியும்.</p>
<p>சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் இன்றைய நிலை தொடர்பில் சட்டமுறைகளை மீறியவர்கள் செய்த முறைப்பாட்டை கொண்டே நடவடிக்கைகளை எடுக்க முற்படுவதாகவே ஊடகங்கள் மூலம் வெளியாகும் செய்திகள் ஏற்படுத்தும் புரிதலாக இருப்பதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது. பொது மக்களிடையே இத்தகைய புரிதலே தோற்றுவிக்கப்படும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.</p>
<p>மற்றையது தகவலறிதல் மூலம் சட்ட மீறல்களை இனங்கண்டு அவற்றை கட்டுப்படுத்தி சட்டங்களை நடைமுறைப்படுத்த முனைவது.</p>
<p>அப்படி நோக்கின் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பில் பொலிஸார் ஏன் இதுவரை தகவல் சேகரித்து நடவடிக்கைகள் முன்னெடுத்து சட்ட மீறல்களை கட்டுப்படுத்த தவறியிருந்தனர் என்ற கேள்வியும் எழுகின்றது.</p>
<p>இங்கே சட்ட மீறல் என்பது நிர்வாக நெறிப்படுத்தல் சட்டங்களை மீறுவது தொடர்பிலும் கருத்தில் எடுக்கப்பட வேண்டும்.</p>
<p>இது தொடர்பில் தகவலறிந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நடைபெறும் செயற்பாடுகள் தொடர்பில் உண்மை நிலவரங்களை சென்று பார்த்து புதிதாக பொறுப்பேற்ற வைத்திய அதிகாரிக்கு உதவியாக மக்கள் நலன் சார்ந்து சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய ஒரு சூழலில் பொலிஸார் அதற்கு எதிராக செயற்படுவது போல் இருப்பதாக துறைசார் அறிஞர்களிடையே மேற்கொண்ட உரையாடலின் போது அவர்கள் குறிப்பிட்டனர்.</p>
<p>சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் சிறப்பான சேவையினை மக்களுக்கு பெற்றுக் கொடுப்போருக்கு ஆதரவளிக்கும் வகையில் பொலிஸாரின் செயற்பாடுகள் அமைவதோடு முறைகேடுகளை உரிய காலங்களிலேயே இனம் கண்டு தடுப்பதற்காக விசேட ஏற்பாடுகளை இந்த அனுபவங்கள் அடிப்படையாக கொண்டு பொலிஸார் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.</p>
<p>மேலும், மற்றொரு பொழுதில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்ட குழப்பம் போல் ஏற்படும் சந்தர்ப்பங்களை தவிர்த்து கொள்ள அந்த முயற்சி உதவியாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>யாழில் தொடரும் உணவு சுகாதார சீர்கேடு: இரு வெதுப்பகங்களுக்கு தண்ட பணம் அறிவிப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/health-violations-in-jaffna-bakeries-fined/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Wed, 03 Jul 2024 12:57:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[fast food]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[Nothern Province]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=149231</guid>

					<description><![CDATA[யாழில் தொடரும் உணவு சுகாதார சீர்கேடு: இரு வெதுப்பகங்களுக்கு தண்ட பணம் அறிவிப்பு யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிவந்த இரண்டு வெதுப்பகங்களுக்கு160,000/= தண்ட பணம் விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், கடந்த மாதம் 12ஆம் திகதி நல்லூர் சகாதார வைத்திய அதிகாரி, மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் யாழ் (Jaffna) கொக்குவில் (Kokkuvil) பகுதியில் அமைந்துள்ள வெதுப்பகங்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதன்போது சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 02 வெதுப்பகங்கள் இனங்காணப்பட்டு குறித்த வெதுப்பகங்களுக்கு எதிராக [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>யாழில் தொடரும் உணவு சுகாதார சீர்கேடு: இரு வெதுப்பகங்களுக்கு தண்ட பணம் அறிவிப்பு</h4>
<p>யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிவந்த இரண்டு வெதுப்பகங்களுக்கு160,000/= தண்ட பணம் விதிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அந்தவகையில், கடந்த மாதம் 12ஆம் திகதி <a href="https://tamilnaadi.com/news/local/2023/09/30/speaker-who-worshiped-the-kandan-of-jaffna-nallur/">நல்லூர்</a> சகாதார வைத்திய அதிகாரி, மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் யாழ் (Jaffna) கொக்குவில் (Kokkuvil) பகுதியில் அமைந்துள்ள வெதுப்பகங்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.</p>
<p>இதன்போது சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 02 வெதுப்பகங்கள் இனங்காணப்பட்டு குறித்த வெதுப்பகங்களுக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் வழக்குகள் கடந்த மாதம் 24ஆம் திகதி அன்று தாக்கல் செய்யப்பட்டன.</p>
<p>இதனடிப்படையில், வழக்கினை விசாரித்த நீதவான் ஒரு வெதுப்பகத்தினை மூடி சீல் வைக்குமாறும், மற்றைய வெதுப்பகத்தினை விரைந்து திருத்தி அமைக்குமாறும் கட்டளை வழங்கியுள்ளார்.</p>
<p>இந்தநிலையில், குறித்த வெதுப்பகமானது பா. சஞ்சீவனால் சீல் வைத்து மூடப்பட்டதுடன் வழக்கினை இன்றைய தினத்திற்கு (03) ஒத்திவைக்கப்பட்டது.</p>
<p>அந்தவகையில், இன்று வழக்குகள் மீள விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது நீதவான் செ. லெனின்குமார் இரு வெதுப்பக உரிமையாளர்களுக்கும் தலா 80,000 ரூபாய் தண்டம் அறவிட்டதுடன், திருத்த வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகரால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டமையால் வெதுப்பகங்களை தொடர்ந்து இயங்க அனுமதி வழங்கியுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கையில் உயரமான நபர் இவர் தானாம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/sri-lanka-s-tallest-man-in-mullaitivu/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Apr 2024 10:20:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[mullaitivu]]></category>
		<category><![CDATA[Nothern Province]]></category>
		<category><![CDATA[Sri Lanka S Tallest Man In Mullaitivu]]></category>
		<category><![CDATA[Srilankan Tamil News]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=136287</guid>

					<description><![CDATA[இலங்கையில் உயரமான நபர் இவர் தானாம் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அவர் தான் இலங்கையின் மிக உயரமான நபர் என தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுக்குடியிருப்பு &#8211; கைவேலியில் வசிக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) முன்னாள் போராளியான குணசிங்கம் கசேந்திரன் என்பவரே இவ்வாறு கூறியுள்ளார். அதன்படி ஏழு அடி இரண்டு அங்குல உயரம் கொண்ட இவர், தனது அசாதாரண உயரத்தால் எண்ணற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடுவதாக கூறிவருகிறார். இலங்கையில் எங்கும் தனது கால்களின் நீளத்திற்கு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>இலங்கையில் உயரமான நபர் இவர் தானாம்</h4>
<p>முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அவர் தான் இலங்கையின் மிக உயரமான நபர் என தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>
<p><a href="https://tamilnaadi.com/news/local/2024/04/29/sri-lanka-s-tallest-man-in-mullaitivu/">புதுக்குடியிருப்பு</a> &#8211; கைவேலியில் வசிக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) முன்னாள் போராளியான குணசிங்கம் கசேந்திரன் என்பவரே இவ்வாறு கூறியுள்ளார்.</p>
<p>அதன்படி ஏழு அடி இரண்டு அங்குல உயரம் கொண்ட இவர், தனது அசாதாரண உயரத்தால் எண்ணற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடுவதாக கூறிவருகிறார்.</p>
<p>இலங்கையில் எங்கும் தனது கால்களின் நீளத்திற்கு ஏற்ற பாதணிகளை காணமுடியவில்லை எனவும், அவற்றை வெளிநாடுகளில் இருந்து பெற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இரண்டு பிள்ளைகளின் தந்தையான கசேந்திரன், பேருந்தில் இருக்கை கிடைக்காத வரையில் பயணிக்க முடியாது என்றும், நீண்ட தூர பேருந்தில் பயணித்தால் இருக்கைக்கு முன்பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் கூறுகிறார்.</p>
<p>முச்சக்கர வண்டி ஓட்டுநராக தொழில் புரியும் கசேந்திரன் கழுத்தை வளைத்துக்கொண்டு வாகனத்தை ஓட்ட வேண்டிய நிலைக்கு உள்ளாவதாகவும் அதனால் மிகவும் சிரமமடைவதாகவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>எட்டு வயது சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம்: முன்னாள் திடீர் மரண விசாரணை அதிகாரி குற்றச்சாட்டு</title>
		<link>https://tamilnaadi.com/uncategorized/eight-year-old-girl-arm-amputated-jaffna-hospital/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Wed, 06 Sep 2023 07:17:35 +0000</pubDate>
				<category><![CDATA[ஏனையவை]]></category>
		<category><![CDATA[Eight Year Old Girl Arm Amputated Jaffna Hospital]]></category>
		<category><![CDATA[Hospitals in Sri Lanka]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[Nothern Province]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=92629</guid>

					<description><![CDATA[எட்டு வயது சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம்: முன்னாள் திடீர் மரண விசாரணை அதிகாரி குற்றச்சாட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் எட்டு வயது சிறுமியின் கை அகற்றப்பட்டமை தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவரையும் பொது வெளியில் பகிரங்கப்படுத்த வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் முன்னாள் திடீர் மரண விசாரணை அதிகாரி முத்துக்குமாரு உதயஸ்ரீ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>எட்டு வயது சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம்: முன்னாள் திடீர் மரண விசாரணை அதிகாரி குற்றச்சாட்டு</h4>
<p><a href="https://tamilnaadi.com/news/local/2023/04/20/navakuzhi-hospital-waste-incinerator-jaffna-teaching-hospital-explanation/">யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்</a> எட்டு வயது சிறுமியின் கை அகற்றப்பட்டமை தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவரையும் பொது வெளியில் பகிரங்கப்படுத்த வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் முன்னாள் திடீர் மரண விசாரணை அதிகாரி முத்துக்குமாரு உதயஸ்ரீ தெரிவித்துள்ளார்.</p>
<p>யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,</p>
<p>யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் எட்டு வயது சிறுமி ஒருவரின் கை உரிய முறையில் சிகிச்சை மேற்கொள்ளப்படாமையினால் அகற்றப்பட்டுள்ளது.வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தியே இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.</p>
<p>இச் சம்பவம் மிகுந்த மன வேதனையையும், கடும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குறித்த சிறுமி படிப்பிலும்,விளையாட்டிலும் திறமையானவராக விளங்கியதுடன் பரதநாட்டியத்திலும் திறமை உள்ளவராக காணப்பட்டுள்ளார்.</p>
<p>இந்த சிறுமியின் கை அகற்றப்பட்டமையினால் அவரின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதோடு குறித்த சிறுமி வாழ்க்கை பூராகவும் பாரிய துன்பத்திற்கு ஆளாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதற்கு முழு காரணமான சம்பந்தப்பட்ட தாதியர்கள், வைத்தியர்கள், வைத்திய நிபுணர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.</p>
<p>குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களின் பெயர் விவரங்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு செய்தால் தான் இனிமேலும் இவ்வாறு நிகழாமல் இருக்கும்.</p>
<p>குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். <a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88" target="_blank" rel="noopener">யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை</a>யின் பணிப்பாளராக இருக்கும் வைத்தியர் சத்தியமூர்த்தி வடக்கு மாகாண சுகாதார சேவைகளின் பணிப்பாளராகவும் விளங்குகின்றார்.</p>
<p>இவர் ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளில் சவாரி செய்ய விரும்புகின்றார். ஒரு போதனா வைத்தியசாலையில் நிகழ்ந்த இந்த சம்பவத்திற்கு பொறுப்பு கூற வேண்டியவர் வைத்தியர் சத்தியமூர்த்தி. மாகாணத்தில் ஒரு தவறு நடந்தாலும் அதற்கும் மாகாணரீதியில் பொறுப்பு கூற வேண்டியவர் சத்தியமூர்த்தியாகும்.</p>
<p>ஆனால் அண்மைக்காலங்களாக வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவில் காணப்படும் அரச வைத்தியசாலைகளில் நடக்கும் தவறுகள் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டி வருகின்றனர்.</p>
<p>இந்நிலையில் அண்மையில் கிளிநொச்சியில் பெண் ஒருவரின் கர்ப்பப்பை அகற்றப்பட்டமை தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் சத்தியமூர்த்தியின் கவனத்திற்கு கொண்டு வந்ததோடு அது தொடர்பான விசாரணைகள் நடத்தப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.</p>
<p>இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வைத்தியர்களை நியாயப்படுத்தும் வகையில் அவர் அண்மையில் ஊடகங்களுக்கு கருத்துக்களை தெரிவித்திருந்தார்.</p>
<p>இவ்வாறான நிலையில் மக்கள் இவரிடம் எவ்வாறு நியாயத்தைப் பெற்றுக் கொள்ளமுடியும். அரச நிறுவனம் ஒன்றில் ஒருவர் தொடர்ச்சியாக பணியாற்ற முடியாது. ஆனால் இவர் தொடர்ச்சியாக தற்போது யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலையின் பணிப்பாளராக பணியாற்றி வருகின்றார்.</p>
<p>இவ்வாறான நிலையில் இவருடைய காலத்திலேயே அதிகளவிலான முறைப்பாடுகள் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ளது.</p>
<p>மாகாணத்திலும், மாவட்டத்திலும் தகுதியான பல வைத்தியர்கள் இருக்கின்ற போதும் தொடர்ச்சியாக இவர் இந்த பதவியில் இருந்து வருகின்றார். இதனால் ஏனையவர் தகுதி இருந்தும் குறித்த பதவிக்கு வரமுடியாமல் இருக்கின்றனர் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை</title>
		<link>https://tamilnaadi.com/news/local/heatwave-red-alert-sri-lanka/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/heatwave-red-alert-sri-lanka/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Thu, 24 Aug 2023 06:11:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Eastern Province]]></category>
		<category><![CDATA[Nothern Province]]></category>
		<category><![CDATA[weather]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=90279</guid>

					<description><![CDATA[இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை நாட்டில் நிலவும் கடும் வெப்பமான நிலை எதிர்வரும் ஆகஸ்ட் மாத இறுதி வரை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்கள நிபுணர் ஜனக குமார தெரிவித்துள்ளார். உடலால் உணரப்படும் இந்த வெப்பநிலையை கவனிக்க வேண்டிய நிலை உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். நாடளாவிய ரீதியில் அதிகூடிய வெப்பநிலை திருகோணமலை மாவட்டத்தில் நேற்று முன் தினம் பதிவாகிய நிலையில், அதன் அளவு 37.8 பாகை செல்சியஸாகும். இதேவேளை, நாடளாவிய ரீதியில் மழையில்லாத காலநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை</h4>
<p>நாட்டில் நிலவும் கடும் வெப்பமான நிலை எதிர்வரும் ஆகஸ்ட் மாத இறுதி வரை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்கள நிபுணர் ஜனக குமார தெரிவித்துள்ளார்.</p>
<p>உடலால் உணரப்படும் இந்த வெப்பநிலையை கவனிக்க வேண்டிய நிலை உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>நாடளாவிய ரீதியில் அதிகூடிய வெப்பநிலை <a href="https://tamilnaadi.com/news/local/2023/08/01/north-is-not-tamils-province/">திருகோணமலை</a> மாவட்டத்தில் நேற்று முன் தினம் பதிவாகிய நிலையில், அதன் அளவு 37.8 பாகை செல்சியஸாகும்.</p>
<p>இதேவேளை, நாடளாவிய ரீதியில் மழையில்லாத காலநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p>
<p>இரண்டாவது இடைப்பருவ மழை எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் வரை நாடு முழுவதும் வறட்சியான காலநிலை நீடிக்கலாம் என திணைக்களம் கூறியுள்ளது.</p>
<p>குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அதிக வெப்பநிலை நிலவும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.</p>
<p>தற்போது, ​​நாடளாவிய ரீதியில் நிலவும் கடும் வெப்ப நிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/heatwave-red-alert-sri-lanka/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>குப்பைக்குள் வீசப்பட்ட தங்க நகைகள் &#8211; சுகாதாரப் தொழிலாளியின் நெகிழ்ச்சி செயல்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/municipal-health-recovered-the-goldhrown-garbage/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/municipal-health-recovered-the-goldhrown-garbage/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 22 Aug 2023 04:21:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[Municipal Health Recovered The Goldhrown Garbage]]></category>
		<category><![CDATA[Nothern Province]]></category>
		<category><![CDATA[Sri Lankan Peoples]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=89861</guid>

					<description><![CDATA[குப்பைக்குள் வீசப்பட்ட தங்க நகைகள் &#8211; சுகாதாரப் தொழிலாளியின் நெகிழ்ச்சி செயல் யாழ். சாவகச்சேரியில் குடியிருப்பாளர் ஒருவரினால் வீதியில் குப்பைகளோடு வீசப்பட்ட சுமார் 8 பவுண் தங்க நகைகள் நகரசபை குப்பை மேட்டிலிருந்து சுகாதாரப் பகுதியினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் 21.08.2023 மதியம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, சாவகச்சேரி மண்டுவில் வட்டாரத்தில் வேலுப்பிள்ளை வீதியில் வசிக்கும் குடியிருப்பாளர் ஒருவர் தனது வீட்டில் உள்ள சுமார் 8 பவுண் பெறுமதியான [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>குப்பைக்குள் வீசப்பட்ட தங்க நகைகள் &#8211; சுகாதாரப் தொழிலாளியின் நெகிழ்ச்சி செயல்</h4>
<p>யாழ். <a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF" target="_blank" rel="noopener">சாவகச்சேரியில்</a> குடியிருப்பாளர் ஒருவரினால் வீதியில் குப்பைகளோடு வீசப்பட்ட சுமார் 8 பவுண் தங்க நகைகள் நகரசபை குப்பை மேட்டிலிருந்து சுகாதாரப் பகுதியினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p>
<p>குறித்த சம்பவம் 21.08.2023 மதியம் இடம்பெற்றுள்ளது.</p>
<p>இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,</p>
<p>சாவகச்சேரி மண்டுவில் வட்டாரத்தில் வேலுப்பிள்ளை வீதியில் வசிக்கும் குடியிருப்பாளர் ஒருவர் தனது வீட்டில் உள்ள சுமார் 8 பவுண் பெறுமதியான நகைகளை கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கில் பழைய துணி ஒன்றில் கட்டி குப்பைகள் போல வீட்டிலேயே பாதுகாத்து வந்துள்ளார்.</p>
<p>இந்நிலையில் அண்மையில் அவரது வீட்டை சுத்தம் செய்கின்ற பொழுது குறித்த நகைகளும் குப்பைகளோடு கட்டப்பட்டு வீதியில் கொட்டப்பட்டுள்ளது.</p>
<p>இந்நிலையில் இன்று மண்டுவில் வட்டாரத்தில் வழமையான கழிவகற்றும் நடவடிக்கையில் சாவகச்சேரி நகரசபை சுகாதாரப் பகுதியினர் ஈடுபட்டிருந்தனர்.</p>
<p>இதன்போது குறித்த வீட்டில் முன்னால் இருந்த குப்பைகளும் சுகாதார தொழிலாளர்களால் அகற்றப்பட்டு உழவியந்திரத்தில் நகராட்சி மன்றத்திற்கு சொந்தமான குப்பைகள் தரம் பிரிக்கின்ற இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கொட்டப்பட்டுள்ளது.</p>
<p>இந்நிலையில் வீட்டிலிருந்த நகைகள் காணாமல் போனதையடுத்து நிலைமையை உணர்ந்த உரிமையாளர் குப்பைகளோடு நகைகளும் வீதியில் கொட்டப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வீதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கேமராக்களை சோதனையிட்டுள்ளார்.</p>
<p>அப்பொழுது இன்று காலை அப்பகுதியில் நகராட்சி மன்ற கழிவகற்றும் வாகனம் மூலம் கழிவுகள் அகற்றப்பட்டிருந்தமை அவதானித்துள்ளார்.</p>
<p>இதை அடுத்து உடனடியாக சாவகச்சேரி நகராட்சி மன்றத்துக்கு சென்று பிரதம நிர்வாக அதிகாரி செ.அனுசியாவிடம் நிலைமை தொடர்பாக தெரியப்படுத்தியுள்ளார்.</p>
<p>இதையடுத்து உடனடியாக செயற்பட்ட நகரசபை நிர்வாக அதிகாரி மற்றும் நகரசபை சுகாதார மேற்பார்வை உத்தியோகத்தர்களான பா.தயாகரன், மற்றும் பா.நிஷாந்தன் ஆகியோர் நகரசபை கழிவு சேகரிக்கும் இடத்திற்கு எவரையும் அனுமதிக்காத வண்ணம் செயற்பட்டு சுகாதார தொழிலாளர்களைக் கொண்டு தேடுதலை மேற்கொண்டனர்.</p>
<p>இதன்போது குறித்த குடியிருப்பாளர் பழைய துணியில் கட்டி குப்பைகளோடு குப்பையாக வீதியில் வீசிய சுமார் 8 பவுண் நகைகள் குடியிருப்பாளரின் முன்னிலையிலேயே சுகாதார தொழிலாளியான சண்முகம் தமிழ்சனால் மீட்கப்பட்டு உடனடியாகவே உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.</p>
<p>நகரசபை சுகாதார பகுதினரின் நேர்மையான விரைந்த செயல்பாடு நகரசபை குடியிருப்பாளர்கள் மற்றும் நகர வர்த்தகர்கள் மத்தியில் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/municipal-health-recovered-the-goldhrown-garbage/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
