<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>news sri lanka &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/news-sri-lanka/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Wed, 14 May 2025 06:08:28 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>news sri lanka &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஜனாதிபதிக்காக கொழும்பில் தேடப்படும் வீடு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/for-prsident-anura-searching-home-in-colombo/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Wed, 14 May 2025 06:08:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura Kumara Dissanayaka]]></category>
		<category><![CDATA[breaking news sri lanka]]></category>
		<category><![CDATA[cricket sri lanka]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[For Prsident Anura Searching Home In Colombo]]></category>
		<category><![CDATA[news from sri lanka]]></category>
		<category><![CDATA[news in sri lanka today]]></category>
		<category><![CDATA[news sri lanka]]></category>
		<category><![CDATA[President of Sri lanka]]></category>
		<category><![CDATA[sjb]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[sri lanka news]]></category>
		<category><![CDATA[sri lanka news live]]></category>
		<category><![CDATA[sri lanka news sinhala]]></category>
		<category><![CDATA[sri lanka news tamil]]></category>
		<category><![CDATA[sri lanka news today]]></category>
		<category><![CDATA[Sri lanka politics]]></category>
		<category><![CDATA[sri lanka tamil news today]]></category>
		<category><![CDATA[sri lanka trending]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=197160</guid>

					<description><![CDATA[ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தங்குவதற்காக கொழும்பில் வீடொன்று தேடப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான வருண ராஜபக்ச இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். வருண ராஜபக்சவின் யூடியூப் பக்கத்தில் இந்த விடயம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி அனுர ஜனாதிபதி பெலவத்தையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணி தலைமைக் காரியாலயத்தில் தங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பில் எழுந்துள்ள சில பிரச்சினைகளினால் பாதுப்பான வீடொன்றை தேடி வருவதாகத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தங்குவதற்காக கொழும்பில் வீடொன்று தேடப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான வருண ராஜபக்ச இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.</p>
<p>வருண ராஜபக்சவின் யூடியூப் பக்கத்தில் இந்த விடயம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>ஜனாதிபதி அனுர ஜனாதிபதி பெலவத்தையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணி தலைமைக் காரியாலயத்தில் தங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.</p>
<p>ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பில் எழுந்துள்ள சில பிரச்சினைகளினால் பாதுப்பான வீடொன்றை தேடி வருவதாகத் தெரிவித்துள்ளார்.</p>
<p>ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அதிகாரபூர்வ ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்துவதில்லை என வாக்குறுதி அளித்திருந்தார்.</p>
<p>இதன் காரணமாக கொழும்பில் வசிப்பதற்காக, சாதாரணமான வீடொன்று ஜனாதிபதி தரப்பில் தேடப்பட்டு வருவதாக வருண ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p>
<p>எனினும் இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி தரப்பில் அதிகாரபூர்வ அறிவிப்புக்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>உப்பு தட்டுப்பாட்டுக்கு அமைச்சரவையை குற்றம் சுமத்தும் உற்பத்தியாளர்கள்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/manufacturers-blame-cabinet-for-salt-shortage/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Wed, 14 May 2025 06:08:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[breaking news sri lanka]]></category>
		<category><![CDATA[cricket sri lanka]]></category>
		<category><![CDATA[Manufacturers Blame Cabinet For Salt Shortage]]></category>
		<category><![CDATA[news from sri lanka]]></category>
		<category><![CDATA[news in sri lanka today]]></category>
		<category><![CDATA[news sri lanka]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[sri lanka cabinet]]></category>
		<category><![CDATA[sri lanka news]]></category>
		<category><![CDATA[sri lanka news live]]></category>
		<category><![CDATA[sri lanka news sinhala]]></category>
		<category><![CDATA[sri lanka news tamil]]></category>
		<category><![CDATA[sri lanka news today]]></category>
		<category><![CDATA[Sri lanka politics]]></category>
		<category><![CDATA[sri lanka tamil news today]]></category>
		<category><![CDATA[sri lanka trending]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=197162</guid>

					<description><![CDATA[உப்பை இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவை முடிவை செயற்படுத்துவதில் ஏற்பட்ட தாமதமே, நாடளாவிய ரீதியில் தற்போது ஏற்பட்டுள்ள உப்பு தட்டுப்பாட்டுக்கான காரணம் என்று, இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் நேற்று குற்றம் சாட்டியுள்ளது. இந்த ஆண்டு மார்ச் 26 அன்று 30,000 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதி செய்வதற்கான திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இருப்பினும், இன்றுவரை உப்பு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவில்லை. எனவே தற்போது நிலவும் பற்றாக்குறை, இறக்குமதி செய்யப்படும் உப்பு, இலங்கைக்கு வந்தவுடன் முடிவுக்கு வந்துவிடும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>உப்பை இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவை முடிவை செயற்படுத்துவதில் ஏற்பட்ட தாமதமே, நாடளாவிய ரீதியில் தற்போது ஏற்பட்டுள்ள உப்பு தட்டுப்பாட்டுக்கான காரணம் என்று, இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் நேற்று குற்றம் சாட்டியுள்ளது.</p>
<p>இந்த ஆண்டு மார்ச் 26 அன்று 30,000 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதி செய்வதற்கான திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.</p>
<p>இருப்பினும், இன்றுவரை உப்பு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவில்லை. எனவே தற்போது நிலவும் பற்றாக்குறை, இறக்குமதி செய்யப்படும் உப்பு, இலங்கைக்கு வந்தவுடன் முடிவுக்கு வந்துவிடும் என்று இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்துள்ளார்.</p>
<p>இறக்குமதி உப்பு இந்த ஆண்டு ஏப்ரல் மாத இறுதிக்குள் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும், அது நிகழவில்லை என்று கனக அமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>அதேநேரம், நாட்டில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக உள்ளூர் உற்பத்தியில் ஏற்பட்ட சரிவும் இதற்கு மற்றொரு காரணம் என்று கூறப்படுகிறது.</p>
<p>இதற்கிடையில், இறக்குமதி உப்பு இருப்புக்கள் எதிர்வரும் நாட்களில் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.</p>
<p>இதற்கு மத்தியில் சந்தையில் தற்போது ஒரு கிலோ உப்பு 400க்கும் அதிகமான விலையில் விற்பனையாகிறது.</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>யாழில் 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலம் போன அம்பாளின் சேலை</title>
		<link>https://tamilnaadi.com/news/local/ambal-saree-auctioned-for-9-lakh-rupees-in-jaffna/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Wed, 14 May 2025 06:08:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ambal Saree Auctioned For 9 Lakh Rupees In Jaffna]]></category>
		<category><![CDATA[breaking news sri lanka]]></category>
		<category><![CDATA[cricket sri lanka]]></category>
		<category><![CDATA[Hinduism]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[news from sri lanka]]></category>
		<category><![CDATA[news in sri lanka today]]></category>
		<category><![CDATA[news sri lanka]]></category>
		<category><![CDATA[Northern Province of Sri Lanka]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[sri lanka news]]></category>
		<category><![CDATA[sri lanka news live]]></category>
		<category><![CDATA[sri lanka news sinhala]]></category>
		<category><![CDATA[sri lanka news tamil]]></category>
		<category><![CDATA[sri lanka news today]]></category>
		<category><![CDATA[Sri lanka politics]]></category>
		<category><![CDATA[sri lanka tamil news today]]></category>
		<category><![CDATA[sri lanka trending]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=197161</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம்(Jaffna) புங்குடுதீவு கண்ணகை அம்பாளுக்கு சாற்றிய சேலை 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்தில் தீர்த்த உற்சவமானது நேற்றையதினம்(13) வெகு சிறப்பாக நடைபெற்றது. இதன்போது அம்பாளின் சேலைகள் ஏலத்தில் விடப்பட்டன. இந்நிலையில் ஒரு சேலை ஒன்பது இலட்சம் ரூபாய் ஏலம் போனமை குறிப்பிடத்தக்கது. &#160;]]></description>
										<content:encoded><![CDATA[<p>யாழ்ப்பாணம்(Jaffna) புங்குடுதீவு கண்ணகை அம்பாளுக்கு சாற்றிய சேலை 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.</p>
<p>குறித்த ஆலயத்தில் தீர்த்த உற்சவமானது நேற்றையதினம்(13) வெகு சிறப்பாக நடைபெற்றது.</p>
<p>இதன்போது அம்பாளின் சேலைகள் ஏலத்தில் விடப்பட்டன.</p>
<p>இந்நிலையில் ஒரு சேலை ஒன்பது இலட்சம் ரூபாய் ஏலம் போனமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தமிழர் பகுதிக்கு பயணிகளுடன் சென்ற பேருந்தில் ஏற்பட்ட விபரீதம் &#8211; கழன்றோடிய சக்கரம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/another-bus-accident-in-nuwara-eliya/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Wed, 14 May 2025 06:08:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Another Bus Accident In Nuwara Eliya]]></category>
		<category><![CDATA[Batticaloa]]></category>
		<category><![CDATA[breaking news sri lanka]]></category>
		<category><![CDATA[cricket sri lanka]]></category>
		<category><![CDATA[news from sri lanka]]></category>
		<category><![CDATA[news in sri lanka today]]></category>
		<category><![CDATA[news sri lanka]]></category>
		<category><![CDATA[Nuwara Eliya]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[sri lanka news]]></category>
		<category><![CDATA[sri lanka news live]]></category>
		<category><![CDATA[sri lanka news sinhala]]></category>
		<category><![CDATA[sri lanka news tamil]]></category>
		<category><![CDATA[sri lanka news today]]></category>
		<category><![CDATA[Sri Lanka police]]></category>
		<category><![CDATA[Sri lanka politics]]></category>
		<category><![CDATA[sri lanka tamil news today]]></category>
		<category><![CDATA[sri lanka trending]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=197159</guid>

					<description><![CDATA[நுவரெலியாவில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில், சக்கரம் கழன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த நான்கு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வலப்பனை பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா-வலப்பனை பிரதான வீதியில் உள்ள மஹா ஊவா வளைவு பகுதியில் நேற்று பிற்பகல் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்ற குழுவினரை ஏற்றிச் சென்ற பேருந்து, மட்டக்களப்புக்கு மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​பேருந்தின் முன் இடது சக்கரம் கழன்று, ஓட்டுநரின் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>நுவரெலியாவில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில், சக்கரம் கழன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.</p>
<p>காயமடைந்தவர்கள் நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வலப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>நுவரெலியா-வலப்பனை பிரதான வீதியில் உள்ள மஹா ஊவா வளைவு பகுதியில் நேற்று பிற்பகல் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p>
<p>மட்டக்களப்பிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்ற குழுவினரை ஏற்றிச் சென்ற பேருந்து, மட்டக்களப்புக்கு மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​பேருந்தின் முன் இடது சக்கரம் கழன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததுள்ளது.</p>
<p>பின்னர் பேருந்து சாலையின் இடதுபுறத்தில் உள்ள மலையில் மோதி நின்றுள்ளது.</p>
<p>பேருந்து விபத்துக்குள்ளான பகுதி செங்குத்தான மற்றும் வளைவுகள் நிறைந்த சாலையில் இருப்பதாகவும், கடந்த காலங்களில் அந்த இடத்தில் பல கடுமையான விபத்துக்கள் நடந்துள்ளதாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறித்து விசாரணை</title>
		<link>https://tamilnaadi.com/news/local/organised-crime-police-to-probe-opposition-links/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Wed, 14 May 2025 06:08:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[breaking news sri lanka]]></category>
		<category><![CDATA[CID - Sri Lanka Police]]></category>
		<category><![CDATA[cricket sri lanka]]></category>
		<category><![CDATA[Ministry of Defense Sri Lanka]]></category>
		<category><![CDATA[news from sri lanka]]></category>
		<category><![CDATA[news in sri lanka today]]></category>
		<category><![CDATA[news sri lanka]]></category>
		<category><![CDATA[Organised Crime Police To Probe Opposition Links]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[sri lanka news]]></category>
		<category><![CDATA[sri lanka news live]]></category>
		<category><![CDATA[sri lanka news sinhala]]></category>
		<category><![CDATA[sri lanka news tamil]]></category>
		<category><![CDATA[sri lanka news today]]></category>
		<category><![CDATA[Sri lanka politics]]></category>
		<category><![CDATA[sri lanka tamil news today]]></category>
		<category><![CDATA[sri lanka trending]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=197158</guid>

					<description><![CDATA[பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். திட்டமிட்ட குற்றக் கும்பல்களுடன் தொடர்பு பேணும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் தேசியப் பாதுகாப்பு பற்றி பேசும் சில எதிர்க்கட்சி உறுப்பினர்களது கட்சிகளில் திட்டமிட்ட குற்றக் கும்பல்களுடன் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.</p>
<p>பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.</p>
<p>திட்டமிட்ட குற்றக் கும்பல்களுடன் தொடர்பு பேணும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.</p>
<p>ஆங்கில ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.</p>
<p>நாடாளுமன்றில் தேசியப் பாதுகாப்பு பற்றி பேசும் சில எதிர்க்கட்சி உறுப்பினர்களது கட்சிகளில் திட்டமிட்ட குற்றக் கும்பல்களுடன் தொடர்புடையவர்கள் அங்கம் வகிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>இவ்வாறான 50க்கும் மேற்பட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்த நபர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.</p>
<p>ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி, சர்வஜன பலய உள்ளிட்ட பல கட்சிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சிலர் இவ்வாறு குற்றக் கும்பல்களுடன் தொடர்புபட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p>
<p>அண்மையில் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட சில எதிர்க்கட்சி வேட்பாளர்கள் திட்டமிட்ட குற்றக் கும்பல்களுடன் தொடர்புடையவர்கள் என அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மீண்டும் தரம் உயர்த்தப்பட்ட சிறிலங்கன் எயார்லைன்ஸ்!</title>
		<link>https://tamilnaadi.com/uncategorized/sri-lanka-news-today-5/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Wed, 23 Oct 2024 07:12:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[ஏனையவை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[breaking news]]></category>
		<category><![CDATA[breaking news sri lanka]]></category>
		<category><![CDATA[english news]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[news from sri lanka]]></category>
		<category><![CDATA[news in sri lanka today]]></category>
		<category><![CDATA[news sri lanka]]></category>
		<category><![CDATA[newsfirst sri lanka]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[sri lanka latest news]]></category>
		<category><![CDATA[sri lanka news]]></category>
		<category><![CDATA[sri lanka news live]]></category>
		<category><![CDATA[sri lanka news sinhala]]></category>
		<category><![CDATA[sri lanka news tamil]]></category>
		<category><![CDATA[sri lanka news today]]></category>
		<category><![CDATA[Sri lanka politics]]></category>
		<category><![CDATA[sri lanka tamil news today 2023]]></category>
		<category><![CDATA[sri lanka trending]]></category>
		<category><![CDATA[tamil lanka news]]></category>
		<category><![CDATA[tamil sri lanka news]]></category>
		<category><![CDATA[tv news]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=172499</guid>

					<description><![CDATA[மீண்டும் தரம் உயர்த்தப்பட்ட சிறிலங்கன் எயார்லைன்ஸ்! குறைக்கப்பட்ட இலங்கை தேசிய விமான சேவையான சிறிலங்கன் விமான சேவையின் (Srilankan Airlines) பாதுகாப்பு மதிப்பீட்டை, உலகின் முன்னணி விமான தரமதிப்பீட்டு நிறுவனம் &#8220;Airline Ratings&#8221; மீண்டும் உயர்த்தியுள்ளது. அந்த தரவரிசைகளை தரமிறக்குவதற்கு காரணமான சம்பவம் தொடர்பில் இலங்கை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்தமையே அதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த செப்டெம்பர் 21 ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்ற சிறிலங்கன் எயார்லைன்ஸ் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>மீண்டும் தரம் உயர்த்தப்பட்ட சிறிலங்கன் எயார்லைன்ஸ்!</h4>
<p>குறைக்கப்பட்ட <a href="https://tamilnaadi.com/uncategorized/2024/10/23/sri-lanka-women-are-playing-good-cricket/">இலங்கை</a> தேசிய விமான சேவையான சிறிலங்கன் விமான சேவையின் (Srilankan Airlines) பாதுகாப்பு மதிப்பீட்டை, உலகின் முன்னணி விமான தரமதிப்பீட்டு நிறுவனம் &#8220;Airline Ratings&#8221; மீண்டும் உயர்த்தியுள்ளது.</p>
<p>அந்த தரவரிசைகளை தரமிறக்குவதற்கு காரணமான சம்பவம் தொடர்பில் இலங்கை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்தமையே அதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>கடந்த செப்டெம்பர் 21 ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்ற சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தின் கேப்டன் ஒருவர் விமானி அறைக்குள் நுழைய அனுமதிக்க மறுத்த சம்பவத்தைத் தொடர்ந்து சிறிலங்கன் எயார்லைன்ஸின் பாதுகாப்பு மதிப்பீடு ஆறு நட்சத்திரங்களாகக் குறைக்கப்பட்டது.</p>
<p>விமானம் பறக்கும் போது துணை விமானி கழிவறைக்கு சென்று திரும்பிய போது, பிறகு கேப்டன் விமானி கதவை திறக்கவில்லை.</p>
<p>விமானி கழிவறைக்குள் நுழைந்ததும் கேப்டன் கதவை மூடிவிட்டதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகின.</p>
<p>இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சிறிலங்கன் எயார்லைன்ஸ், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மகிந்தவை பாதுகாக்க வேண்டிய பொறுப்பை அநுரவிடம் ஒப்படைத்த நாமல்</title>
		<link>https://tamilnaadi.com/uncategorized/sri-lanka-news-today-4/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Wed, 23 Oct 2024 07:12:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[ஏனையவை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[breaking news]]></category>
		<category><![CDATA[breaking news sri lanka]]></category>
		<category><![CDATA[english news]]></category>
		<category><![CDATA[news from sri lanka]]></category>
		<category><![CDATA[news in sri lanka today]]></category>
		<category><![CDATA[news sri lanka]]></category>
		<category><![CDATA[newsfirst sri lanka]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[sri lanka latest news]]></category>
		<category><![CDATA[sri lanka news]]></category>
		<category><![CDATA[sri lanka news live]]></category>
		<category><![CDATA[sri lanka news sinhala]]></category>
		<category><![CDATA[sri lanka news tamil]]></category>
		<category><![CDATA[sri lanka news today]]></category>
		<category><![CDATA[Sri lanka politics]]></category>
		<category><![CDATA[sri lanka tamil news today 2023]]></category>
		<category><![CDATA[sri lanka trending]]></category>
		<category><![CDATA[tamil lanka news]]></category>
		<category><![CDATA[tamil sri lanka news]]></category>
		<category><![CDATA[tv news]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=172497</guid>

					<description><![CDATA[மகிந்தவை பாதுகாக்க வேண்டிய பொறுப்பை அநுரவிடம் ஒப்படைத்த நாமல் &#8220;நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு பலர் முயற்சித்து வரும் சூழ்நிலையில், போரை முடிவுக்குக்கொண்டு வந்த மகிந்த ராஜபக்சவை பாதுகாக்க வேண்டியது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் பொறுப்பாகும்.” &#8211; இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:- இந்த நாட்டைப்பிளவுபடுத்துவதற்கும், தமது இலக்கை அடைவதற்கும் பலர் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். அதேபோல் உலகளவில் அடிப்படைவாதம், [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>மகிந்தவை பாதுகாக்க வேண்டிய பொறுப்பை அநுரவிடம் ஒப்படைத்த நாமல்</h4>
<p>&#8220;நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு பலர் முயற்சித்து வரும் சூழ்நிலையில், போரை முடிவுக்குக்கொண்டு வந்த மகிந்த ராஜபக்சவை பாதுகாக்க வேண்டியது ஜனாதிபதி <a href="https://tamilnaadi.com/news/local/2024/09/25/imf-supports-anura-s-government/">அநுரகுமார திஸாநாயக்க</a> தலைமையிலான அரசின் பொறுப்பாகும்.” &#8211; இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p>
<p>இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-</p>
<p>இந்த நாட்டைப்பிளவுபடுத்துவதற்கும், தமது இலக்கை அடைவதற்கும் பலர் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். அதேபோல் உலகளவில் அடிப்படைவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிராதம் தலைதூக்கியுள்ளன.</p>
<p>இவற்றுக்கு எதிராகப் போராடி, போரை முடித்த தலைவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் கடப்பாடாகும்.</p>
<p>முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச்செய்து கொடுக்க வேண்டியதும் அரசின் பொறுப்பாகும். அதேவேளை, எமது அரசியல் முகாம் தான் இந்த நாட்டை அபிவிருத்தி செய்தது.</p>
<p>எனவே, நாட்டை வீழ்த்துவதற்குரிய குரோத அரசியலில் ஈடுபடுவதற்கு நாம் தயாரில்லை. உலகில் எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள்.</p>
<p>ராஜபக்சக்கள் சட்டவிரோதமாக எதையேனும் சேமித்து வைத்திருந்தால் அவற்றைக்கொண்டு வாருங்கள். அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்.” &#8211; என்றார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அரசாங்கத்தை கவிழ்த்து நாமலை ஜனாதிபதியாக்குவோம்: சஞ்சீவ எதிரிமான்ன</title>
		<link>https://tamilnaadi.com/uncategorized/sri-lanka-news-today-4-3/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Wed, 23 Oct 2024 07:12:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[ஏனையவை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[breaking news]]></category>
		<category><![CDATA[breaking news sri lanka]]></category>
		<category><![CDATA[english news]]></category>
		<category><![CDATA[news from sri lanka]]></category>
		<category><![CDATA[news in sri lanka today]]></category>
		<category><![CDATA[news sri lanka]]></category>
		<category><![CDATA[newsfirst sri lanka]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[sri lanka latest news]]></category>
		<category><![CDATA[sri lanka news]]></category>
		<category><![CDATA[sri lanka news live]]></category>
		<category><![CDATA[sri lanka news sinhala]]></category>
		<category><![CDATA[sri lanka news tamil]]></category>
		<category><![CDATA[sri lanka news today]]></category>
		<category><![CDATA[Sri lanka politics]]></category>
		<category><![CDATA[sri lanka tamil news today 2023]]></category>
		<category><![CDATA[sri lanka trending]]></category>
		<category><![CDATA[tamil lanka news]]></category>
		<category><![CDATA[tamil sri lanka news]]></category>
		<category><![CDATA[tv news]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=172495</guid>

					<description><![CDATA[அரசாங்கத்தை கவிழ்த்து நாமலை ஜனாதிபதியாக்குவோம்: சஞ்சீவ எதிரிமான்ன தற்போதைய அரசாங்கத்தை கவிழ்த்து நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்குவோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற, ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு இந்த நாட்டின் கலாசாரத்தை மாற்றியமைப்பதற்கான அதிகாரம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாற்றம் செய்ய வேண்டுமாயின் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையில் மாற்றம் செய்யப்பட வேண்டுமெனவும் நாட்டு மக்களில் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>அரசாங்கத்தை கவிழ்த்து நாமலை ஜனாதிபதியாக்குவோம்: சஞ்சீவ எதிரிமான்ன</h4>
<p>தற்போதைய அரசாங்கத்தை கவிழ்த்து <a href="https://tamilnaadi.com/entertainment/cinema/2024/10/18/namal-shuld-arrested-one-plues-demands-government/">நாமல் ராஜபக்ச</a>வை ஜனாதிபதியாக்குவோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.</p>
<p>அண்மையில் நடைபெற்ற, ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு இந்த நாட்டின் கலாசாரத்தை மாற்றியமைப்பதற்கான அதிகாரம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>மாற்றம் செய்ய வேண்டுமாயின் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையில் மாற்றம் செய்யப்பட வேண்டுமெனவும் நாட்டு மக்களில் மாற்றம் செய்யப்பட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவ்வாறு செய்யத் தவறினால் ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகும் முன்னதாக இந்த அரசாங்கத்தை கவிழ்த்து நாமல் ராஜபக்சவை ஜனாதிபதி பதவியில் அமர்த்த நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ரணிலையும் கம்மன்பிலவையும் சந்தேகிக்கும் கர்தினால் மல்கம் ரஞ்சித்</title>
		<link>https://tamilnaadi.com/uncategorized/sri-lanka-news-today-4-2/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Wed, 23 Oct 2024 07:12:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[ஏனையவை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[breaking news]]></category>
		<category><![CDATA[breaking news sri lanka]]></category>
		<category><![CDATA[english news]]></category>
		<category><![CDATA[news from sri lanka]]></category>
		<category><![CDATA[news in sri lanka today]]></category>
		<category><![CDATA[news sri lanka]]></category>
		<category><![CDATA[newsfirst sri lanka]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[sri lanka latest news]]></category>
		<category><![CDATA[sri lanka news]]></category>
		<category><![CDATA[sri lanka news live]]></category>
		<category><![CDATA[sri lanka news sinhala]]></category>
		<category><![CDATA[sri lanka news tamil]]></category>
		<category><![CDATA[sri lanka news today]]></category>
		<category><![CDATA[Sri lanka politics]]></category>
		<category><![CDATA[sri lanka tamil news today 2023]]></category>
		<category><![CDATA[sri lanka trending]]></category>
		<category><![CDATA[tamil lanka news]]></category>
		<category><![CDATA[tamil sri lanka news]]></category>
		<category><![CDATA[tv news]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=172496</guid>

					<description><![CDATA[ரணிலையும் கம்மன்பிலவையும் சந்தேகிக்கும் கர்தினால் மல்கம் ரஞ்சித் 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் தொடர்பில் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார். குண்டுவெடிப்புக்கு முன்னர் குறிப்பிட்ட புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.என்.ஜே அல்விஸ் தலைமையில் குழுவொன்றை இந்த வருட ஆரம்பத்தில் நியமித்ததன் பின்னணி குறித்து [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>ரணிலையும் கம்மன்பிலவையும் சந்தேகிக்கும் கர்தினால் மல்கம் ரஞ்சித்</h4>
<p>2019ஆம் ஆண்டு <a href="https://tamilnaadi.com/news/local/2024/10/21/easter-attack-sri-lanka-2019-anura-govt/">உயிர்த்த ஞாயிறு</a> குண்டுவெடிப்பு தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் தொடர்பில் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.</p>
<p>குண்டுவெடிப்புக்கு முன்னர் குறிப்பிட்ட புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.என்.ஜே அல்விஸ் தலைமையில் குழுவொன்றை இந்த வருட ஆரம்பத்தில் நியமித்ததன் பின்னணி குறித்து அவர் வினவியுள்ளார்.</p>
<p>2019 ஏப்ரல் 21ஆம் திகதியன்று நடந்த இந்த தாக்குதல் தொடர்பாக, முன்னைய அரச புலனாய்வு சேவை, தேசிய புலனாய்வுத்துறை மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகளின் நடவடிக்கைகளை விசாரிக்கவே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.</p>
<p>எனினும், ரணில் விக்ரமசிங்க புதிய குழுவொன்றை நியமித்தமை சந்தேகத்திற்குரியது என்று கர்தினால் மல்கம் ரஞ்சித் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.</p>
<p>அதிகாரிகளான சானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோரை அரசியல் ரீதியாகப் பலிகடா ஆக்குவதற்காகவே அல்விஸ் தலைமையிலான குழுவை முன்னாள் ஜனாதிபதி நியமித்துள்ளதாக தாம் சந்தேகிப்பதாக கர்தினால் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>அத்துடன், முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையை கையாள்வதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்வதாகத் தெரிகிறது என்றும் கர்தினால் குறிப்பிட்டுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>யாழ்ப்பாணத்துக்கு செல்ல தயங்கும் கோட்டாபய ராஜபக்ச</title>
		<link>https://tamilnaadi.com/uncategorized/sri-lanka-news-today-3/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Wed, 23 Oct 2024 07:11:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[ஏனையவை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[breaking news]]></category>
		<category><![CDATA[breaking news sri lanka]]></category>
		<category><![CDATA[english news]]></category>
		<category><![CDATA[news from sri lanka]]></category>
		<category><![CDATA[news in sri lanka today]]></category>
		<category><![CDATA[news sri lanka]]></category>
		<category><![CDATA[newsfirst sri lanka]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[sri lanka latest news]]></category>
		<category><![CDATA[sri lanka news]]></category>
		<category><![CDATA[sri lanka news live]]></category>
		<category><![CDATA[sri lanka news sinhala]]></category>
		<category><![CDATA[sri lanka news tamil]]></category>
		<category><![CDATA[sri lanka news today]]></category>
		<category><![CDATA[Sri lanka politics]]></category>
		<category><![CDATA[sri lanka tamil news today 2023]]></category>
		<category><![CDATA[sri lanka trending]]></category>
		<category><![CDATA[tamil lanka news]]></category>
		<category><![CDATA[tamil sri lanka news]]></category>
		<category><![CDATA[tv news]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=172493</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணத்துக்கு செல்ல தயங்கும் கோட்டாபய ராஜபக்ச 2011ஆம் ஆண்டு காணாமல் போன இரண்டு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தைத் தவிர நாட்டின் எந்த நீதிமன்றத்திலும் சாட்சியமளிக்கத் தயார் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்றத்தில் நேற்று (22.10.2024) நடைபெற்ற விசாரணையின் போது, அவரது சட்டத்தரணி ரொமேஸ் டி ஊடாக இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் 2011ஆம் ஆண்டு காணாமல் போன செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>யாழ்ப்பாணத்துக்கு செல்ல தயங்கும் கோட்டாபய ராஜபக்ச</h4>
<p>2011ஆம் ஆண்டு காணாமல் போன இரண்டு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தைத் தவிர நாட்டின் எந்த நீதிமன்றத்திலும் சாட்சியமளிக்கத் தயார் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி <a href="https://tamilnaadi.com/news/local/2024/09/24/gotabaya-visit-nepal/">கோட்டாபய ராஜபக்ச</a> தெரிவித்துள்ளார்.</p>
<p>உயர்நீதிமன்றத்தில் நேற்று (22.10.2024) நடைபெற்ற விசாரணையின் போது, அவரது சட்டத்தரணி ரொமேஸ் டி ஊடாக இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.</p>
<p>யாழ்ப்பாணத்தில் 2011ஆம் ஆண்டு காணாமல் போன செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் கடத்தப்பட்டமை தொடர்பான வழக்கில், அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த ராஜபக்ச, யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றில் சாட்சியமளிக்க முதலில் அழைக்கப்பட்டிருந்தார்.</p>
<p>எனினும், பாதுகாப்பு காரணங்களால் அங்கு முன்னிலையாக முடியவில்லை என அவர் கூறியிருந்தார்.</p>
<p>இந்தநிலையில், கோட்டாபய ராஜபக்ச, யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியாது என்றாலும், இலங்கையில் உள்ள வேறு எந்த நீதிமன்றத்திலும் சாட்சியங்களை சமர்ப்பிக்கத் தயாராக இருப்பதாக அவரின் சட்டத்தரணி நேற்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p>
<p>மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னைய தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக் கவலை நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
