<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Kokkudhuduwai Human Burial Ground &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/kokkudhuduwai-human-burial-ground/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Sat, 16 Sep 2023 13:41:39 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Kokkudhuduwai Human Burial Ground &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் முள்ளிவாய்க்கால் போராளிகள்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/kokkudhuduwai-human-burial-ground-3/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sat, 16 Sep 2023 01:52:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[kokkudhuduwai]]></category>
		<category><![CDATA[Kokkudhuduwai Human Burial Ground]]></category>
		<category><![CDATA[mullaitivu]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[Sri Lankan Peoples]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=94004</guid>

					<description><![CDATA[கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் முள்ளிவாய்க்கால் போராளிகள் இலங்கையில் சமகாலத்தில் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதப் புதைகுழிகளை காண வேண்டிய துர்பாக்கிய தேசமாக தமிழர் தாயகம் மாறியுள்ளது. அந்தவகையில் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் 8வது நாள் அகழ்வு முடிவடைந்த நிலையில் 14 மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இறுதிப்போர் என விளிக்கப்படும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் போராடிய நமது சகோதர சகோதரிகளே இவ்வாறு அகழ்வில் மீட்கப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டுகள் தற்போது இலங்கை அரசுக்கு எதிராக வலுபெற்று வருகின்றன. மேலும், அகழ்வுப்பணிகளின் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் முள்ளிவாய்க்கால் போராளிகள்</h4>
<p>இலங்கையில் சமகாலத்தில் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வரும் <a href="https://tamilnaadi.com/news/local/2023/09/16/kokkudhuduai-human-burial-issue-wijeyadasa/">மனிதப் புதைகுழிகளை</a> காண வேண்டிய துர்பாக்கிய தேசமாக தமிழர் தாயகம் மாறியுள்ளது.</p>
<p>அந்தவகையில் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் 8வது நாள் அகழ்வு முடிவடைந்த நிலையில் 14 மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.</p>
<p>இறுதிப்போர் என விளிக்கப்படும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் போராடிய நமது சகோதர சகோதரிகளே இவ்வாறு அகழ்வில் மீட்கப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டுகள் தற்போது இலங்கை அரசுக்கு எதிராக வலுபெற்று வருகின்றன.</p>
<p>மேலும், அகழ்வுப்பணிகளின் தாக்கங்கள் இலங்கை மட்டுமல்லாது ஐ. நாவிலும் எதிரொலித்திருந்தமை இலங்கை அரசுக்கு மற்றுமொரு சவாலாக மாறியுள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட சிறீதரன்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/kokkudhuduwai-human-burial-ground-2/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 11 Sep 2023 15:14:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[kokkudhuduwai]]></category>
		<category><![CDATA[Kokkudhuduwai Human Burial Ground]]></category>
		<category><![CDATA[mullaitivu]]></category>
		<category><![CDATA[S Shritharan]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=93672</guid>

					<description><![CDATA[அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட சிறீதரன் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் ஐந்தாவது நாளாக இன்று (11) இடம்பெறும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வருகைதந்து அகழ்வுப் பணிகளை பார்வையிட்டனர் முல்லைத்தீவு &#8211; கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த புதன்கிழமை (06) உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் ஐந்தாம்நாள் அகழ்வாய்வுகள் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட சிறீதரன்</h4>
<p>முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் ஐந்தாவது நாளாக இன்று (11) இடம்பெறும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வருகைதந்து அகழ்வுப் பணிகளை பார்வையிட்டனர்</p>
<p><a href="https://tamilnaadi.com/news/local/2023/09/05/mullaitathivu-student-distric-first-in-comerce/">முல்லைத்தீவு</a> &#8211; கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த புதன்கிழமை (06) உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது.</p>
<p>இந் நிலையில் ஐந்தாம்நாள் அகழ்வாய்வுகள் இன்று (11) முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ, தடயவியல் பொலிசார், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p>
<p>இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் <a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D" target="_blank" rel="noopener">சிறீதரன்</a> மற்றும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வருகைதந்து அகழ்வுப் பணிகளை பார்வையிட்டனர்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கொக்குத்தொடுவாயில் விடுதலைப் புலிகள் பெண் போராளிகளது மனித எச்சங்கள் மீட்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/kokkudhuduwai-human-burial-ground/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/kokkudhuduwai-human-burial-ground/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sat, 09 Sep 2023 03:46:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kokkudhuduwai Human Burial Ground]]></category>
		<category><![CDATA[mullaitivu]]></category>
		<category><![CDATA[Sri Lanka Final War]]></category>
		<category><![CDATA[Sri Lanka police]]></category>
		<category><![CDATA[Sri Lankan Peoples]]></category>
		<category><![CDATA[Sri Lankan Tamils]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=93175</guid>

					<description><![CDATA[கொக்குத்தொடுவாயில் விடுதலைப் புலிகள் பெண் போராளிகளது மனித எச்சங்கள் மீட்பு முல்லைத்தீவு &#8211; கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் மூன்றாவது நாள் அகழ்வின் போது, விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் போராளிகளின் மனித எச்சங்கள் இரண்டு முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்த மனித எச்சங்களுடன் மீட்கப்பட்ட பெண்களின் உள்ளாடைகளிலும், பச்சைநிற முழுநீள காட்சட்டைகளிலும் இலக்கமிடப்பட்டிருந்துள்ளது. அத்தோடு குறித்த மனித எச்சங்கள் இரண்டிலும் துப்பாக்கி ரவைகள் இருந்துள்ளமையையும் அவதானிக்க முடிந்துள்ளது. முல்லைத்தீவு &#8211; கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>கொக்குத்தொடுவாயில் விடுதலைப் புலிகள் பெண் போராளிகளது மனித எச்சங்கள் மீட்பு</h4>
<p>முல்லைத்தீவு &#8211; கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் மூன்றாவது நாள் அகழ்வின் போது, விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் போராளிகளின் மனித எச்சங்கள் இரண்டு முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>அத்துடன், அந்த மனித எச்சங்களுடன் மீட்கப்பட்ட பெண்களின் உள்ளாடைகளிலும், பச்சைநிற முழுநீள காட்சட்டைகளிலும் இலக்கமிடப்பட்டிருந்துள்ளது. அத்தோடு குறித்த மனித எச்சங்கள் இரண்டிலும் துப்பாக்கி ரவைகள் இருந்துள்ளமையையும் அவதானிக்க முடிந்துள்ளது.</p>
<p><a href="https://tamilnaadi.com/news/local/2023/09/05/mullaitathivu-student-distric-first-in-comerce/">முல்லைத்தீவு</a> &#8211; கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்ரெம்பர் (06) வியாழனன்று உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.</p>
<p>இந் நிலையில் மூன்றாம்நாள் அகழ்வாய்வுகள் இன்று (08) <a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D" target="_blank" rel="noopener">முல்லைத்தீவு</a> நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.</p>
<p>இதன்போது, பெண் போராளிகள் இருவரது மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டன.</p>
<p>இது தொடர்பில் குறித்த அகழ்வுப் பணியில் இணைந்திருந்த சட்டத்தரணிகளுள் ஒருவரான கே.எஸ்.நிரஞ்சன் கருத்துத் தெரிவிக்கையில்,</p>
<p>ஏற்கனவே இனங்காணப்பட்ட மனித மனித எச்சங்களில், இரண்டு மனித உடல்களின் மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அவ்வாறு அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் இரண்டும், விடுதலைப்புலிகள் அமைப்பின் பெண்போராளிகளுடையதாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.</p>
<p>அத்தோடு அகழ்வாய்வில் எடுக்கப்பட்ட ஆடைகளில் இலக்கங்களிடப்பட்டுள்ளன. அதற்கமைய முதலாவது மனித எச்சத்தின் பச்சைநிற நீளக் காற்சட்டையில் 3204 என்ற இலக்கமும், முளுநீள கையுடைய மேற்சட்டையும், 3174 இலக்கமுடைய பெண்களின் உள்ளாடையும், மார்புக் கச்சையும் எடுக்கப்பட்டது.</p>
<p>தொடர்ந்து இரண்டாவது மனித எச்சம் அகழ்ந்தெடுக்கப்பட்டது. அதிலும் பச்சைநிறக் முழுநீளக் காட்சட்டையும், முழுநீளக் கையுடைய மேற்சட்டையும், 1564 இலக்கமுடைய உள்ளாடையும், மார்புக்கச்சையும் எடுக்கப்பட்டது.</p>
<p>அதேவேளை அகழ்ந்தெடுக்கப்பட்ட இருமனித எச்சங்களிலும் துப்பாக்கி ரவைகள் இருந்ததை அவதானிக்க முடிந்தது.</p>
<p>மேலும் அவ்வாறு ஆடைகளில் இலக்கங்கள் மாத்திரமே பொறிக்கப்பட்டுள்ளதுடன், கறுப்பு நிறத்திலான நூலினாலேயே ஆடைகளில் இலக்கங்கள் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.</p>
<p>மேலும் குறித்த அகழ்வுப் பணி இடம்பெறும் இடத்தில் தொல்லியல் ஆய்வாளர் பரமு புஷ்பரட்ணம், யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி, சட்டத்தரணி ரனித்தா ஞானராசா, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள், தடயவியல் பொலிசார், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் இராமலிங்கம் சத்தியசீலன், சமூகசெயற்பாட்டாளர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர்இளஞ்செழியன், கொக்குத்தொடுவாய் கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர் கி.சிவகுரு ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.</p>
<p>குறித்த மனிதப் புதைகுழி வளாகத்தில் பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர். அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்களும், தடயப்பொருட்களும் பொதியிடப்பட்டு, சட்டவைத்திய அதிகாரியால் பகுப்பாய்வுகளுக்காக எடுத்து செல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/kokkudhuduwai-human-burial-ground/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
