<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>England &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/england/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Mon, 30 Jun 2025 17:24:20 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>England &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பிரித்தானியாவின் பரபரப்பான வீதியில் இறந்து கிடந்த பெண்: விசாரணை தீவிரம்</title>
		<link>https://tamilnaadi.com/news/world/woman-falling-dies-in-manchester/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 30 Jun 2025 17:24:20 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[England]]></category>
		<category><![CDATA[Manchester]]></category>
		<category><![CDATA[News]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=201056</guid>

					<description><![CDATA[பிரித்தானியாவின் மான்செஸ்டரில் பெண்ணொருவர் உயரமான கட்டிடத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மான்செஸ்டரின் பரபரப்பான வீதியான Great Ancoatsயில் பெண்ணொருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவசர சேவைகள் அழைக்கப்பட்டன. பின்னர் லியோனார்டோ ஹொட்டல் மற்றும் விக்டோரியா ஹவுஸ் அடுக்குமாடி குடியிருப்புகளைச் சுற்றியுள்ள பகுதி சுற்றி வளைக்கப்பட்டது. அத்துடன் பொலிஸ் தடுப்பு அமைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், குறித்த பெண் ஒரு கட்டிடத்தில் இருந்து விழுந்ததாக தெரிவதாகம், மேலும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றும் கிரேட்டர் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>பிரித்தானியாவின் மான்செஸ்டரில் பெண்ணொருவர் உயரமான கட்டிடத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>
<p>மான்செஸ்டரின் பரபரப்பான வீதியான Great Ancoatsயில் பெண்ணொருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.</p>
<p>இதனையடுத்து அவசர சேவைகள் அழைக்கப்பட்டன. பின்னர் லியோனார்டோ ஹொட்டல் மற்றும் விக்டோரியா ஹவுஸ் அடுக்குமாடி குடியிருப்புகளைச் சுற்றியுள்ள பகுதி சுற்றி வளைக்கப்பட்டது.</p>
<p>அத்துடன் பொலிஸ் தடுப்பு அமைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், குறித்த பெண் ஒரு கட்டிடத்தில் இருந்து விழுந்ததாக தெரிவதாகம், மேலும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றும் கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறை தெரிவித்தது.</p>
<p>மேலும் Greater Manchester Police கூறுகையில், &#8220;இன்று காலை 7 மணியளவில் ஒரு பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்க Great Ancoats வீதிக்கு அழைக்கப்பட்டோம். அவர் ஒரு கட்டிடத்தில் இருந்து விழுந்ததாகத் தெரிகிறது.</p>
<p>ஆனால் தற்போது சூழ்நிலைகளைக் கண்டறிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வடமேற்கு ஆம்புலன்ஸ் சேவையைத் தொடர்பு கொண்டுள்ளோம்&#8221; என தெரிவித்துள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்தியா-இங்கிலாந்து இடையிலான போட்டியின் போது பண்ட் செய்த செயல்</title>
		<link>https://tamilnaadi.com/entertainment/pants-action-during-the-india-england-match/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sun, 22 Jun 2025 17:18:43 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[பொழுதுபோக்கு]]></category>
		<category><![CDATA[cricket]]></category>
		<category><![CDATA[England]]></category>
		<category><![CDATA[England Cricket Team]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Indian Cricket Team]]></category>
		<category><![CDATA[Rishabh Pant]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=200359</guid>

					<description><![CDATA[இந்தியா-இங்கிலாந்து இடையிலான போட்டியில் ரிசப் பண்ட் நடுவரின் கண்முன்னே பந்தை கோபமாக தூக்கி எறிந்த காணொளி சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்று வருகிறது. நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவரில் 471 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 49 ஓவரில் 3 [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியா-இங்கிலாந்து இடையிலான போட்டியில் ரிசப் பண்ட் நடுவரின் கண்முன்னே பந்தை கோபமாக தூக்கி எறிந்த காணொளி சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.</p>
<p>இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்று வருகிறது.</p>
<p>நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.</p>
<p>அதன்படி, இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவரில் 471 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தது.</p>
<p>இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது.</p>
<p>இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 49 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 209 ஓட்டங்கள் எடுத்தது. இந்நிலையில் இன்று 3ஆவது நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.</p>
<p>இந்நிலையில் 60 ஓவர்களுக்கு பிறகு பந்தை மாற்ற வேண்டிய சூழல் வந்தது.</p>
<p>அதனால் இந்திய வீரர்கள் பும்ரா, கில், ரிஷப் பண்ட், சிராஜ் ஆகியோர் பந்து மாற்றுமாறு கோரிக்கை விடுத்தனர்.</p>
<p>ஆனால் இதனை சோதித்து பார்த்த நடுவர்கள் பந்து சரியாக உள்ளதாக தெரிவித்து வேறு பந்தை அனுமதிக்கவில்லை.</p>
<p>மற்ற வீரர்களை விட ரிஷப் பண்ட் கேட்டபோது நடுவர் முடியாது என்றதால், கோவமான பண்ட் நடுவரின் கண்முன்னே பந்தை கோபமாக தூக்கி எறிந்தார்.</p>
<p>இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பரவலாகி வருகிறது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்தியாவில் அவசரமாக தரை இறங்கிய இங்கிலாந்து விமானம்</title>
		<link>https://tamilnaadi.com/news/f-35-jet-lands-at-tvm-airport/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sun, 15 Jun 2025 16:44:35 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[England]]></category>
		<category><![CDATA[flight]]></category>
		<category><![CDATA[Fuel Price In World]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[kerala]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=200058</guid>

					<description><![CDATA[இங்கிலாந்தின்(UK) எப்-35 போர் விமானம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவமானது நேற்றையதினம்(14) இரவு இடம்பெற்றுள்ளது. இரவு சுமார் 9.30 மணிக்கு பாதுகாப்பாக தரையிறங்கியதாகத் தகவல்கள் கூறுகின்றன. இந்த விமானம் நடுவானில் பறந்த போது எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டதால், அவரசமாக தரை இறக்க விமானி அனுமதி கேட்டுள்ளார். விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக அவசரநிலை அறிவித்து, விமானம் பாதுகாப்பாக தரையிறங்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தற்போது, [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இங்கிலாந்தின்(UK) எப்-35 போர் விமானம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>குறித்த சம்பவமானது நேற்றையதினம்(14) இரவு இடம்பெற்றுள்ளது.</p>
<p>இரவு சுமார் 9.30 மணிக்கு பாதுகாப்பாக தரையிறங்கியதாகத் தகவல்கள் கூறுகின்றன.</p>
<p>இந்த விமானம் நடுவானில் பறந்த போது எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டதால், அவரசமாக தரை இறக்க விமானி அனுமதி கேட்டுள்ளார்.</p>
<p>விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக அவசரநிலை அறிவித்து, விமானம் பாதுகாப்பாக தரையிறங்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.</p>
<p>தற்போது, அந்த போர்விமானம் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசிடமிருந்து எரிபொருள் நிரப்ப அனுமதி எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதேவேளை, இன்றையதினம் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் &#8211; கவுரிகுந்த் அருகே இடம்பெற்ற உலங்குவானூர்தி விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பிரித்தானியாவில் வேலையிழக்கும் அபாயத்தில் ஆயிரக்கணக்கானோர்</title>
		<link>https://tamilnaadi.com/news/world/thousands-of-workers-to-lose-jobs-in-uk/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Feb 2025 11:34:05 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[England]]></category>
		<category><![CDATA[Thousands Of Workers To Lose Jobs In Uk]]></category>
		<category><![CDATA[United Kingdom]]></category>
		<category><![CDATA[World]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=194069</guid>

					<description><![CDATA[பிரித்தானியாவில் வேலையிழக்கும் அபாயத்தில் ஆயிரக்கணக்கானோர் பிரித்தானியாவின் (United Kingdom) மருத்துவ அமைப்புகளில் ஒன்றான தேசிய சுகாதார சேவை அமைப்பில் பணியாற்றும் ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானியாவின் மருத்துவ அமைப்புகளில் ஒன்றான தேசிய சுகாதார சேவை அமைப்பில் (NHS England) பணியாற்றும் ஆயிரக்கணக்கானவர்களை பிரித்தானிய சுகாதாரச் செயலரான வெஸ் ஸ்ட்ரீட்டிங் (Wes Streeting) பணிநீக்கம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இங்கிலாந்து NHS அமைப்பின் தலைவராக இருந்த அமண்டா பிரிச்சார்ட் (Amanda Pritchard), பிரித்தானிய [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>பிரித்தானியாவில் வேலையிழக்கும் அபாயத்தில் ஆயிரக்கணக்கானோர்</h4>
<p><a href="https://tamilnaadi.com/news/local/2025/02/19/terrorist-attacks-in-srilanka-cannot-ruled-out-uk/">பிரித்தானியாவின்</a> (United Kingdom) மருத்துவ அமைப்புகளில் ஒன்றான தேசிய சுகாதார சேவை அமைப்பில் பணியாற்றும் ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>பிரித்தானியாவின் மருத்துவ அமைப்புகளில் ஒன்றான தேசிய சுகாதார சேவை அமைப்பில் (NHS England) பணியாற்றும் ஆயிரக்கணக்கானவர்களை பிரித்தானிய சுகாதாரச் செயலரான வெஸ் ஸ்ட்ரீட்டிங் (Wes Streeting) பணிநீக்கம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>ஏற்கனவே இங்கிலாந்து NHS அமைப்பின் தலைவராக இருந்த அமண்டா பிரிச்சார்ட் (Amanda Pritchard), பிரித்தானிய சுகாதாரச் செயலரான வெஸ் ஸ்ட்ரீட்டிங் கொடுத்த அழுத்தம் காரணமாக பதவி விலகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.</p>
<p>இந்தநிலையில், அவருக்கு பதிலாக அந்த பதவிக்கு சர் ஜிம் மேக்கீ (Sir Jim Mackey) என்பவரை வெஸ் ஸ்ட்ரீட்டிங் நியமிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.</p>
<p>இந்தநிலையில், <a href="https://www.nhs.uk/" target="_blank" rel="noopener">NHS</a> அமைப்பின் புதிய யுகத்தை உருவாக்க இருப்பதை இலக்காகக் கொண்டுள்ள வெஸ் ஸ்ட்ரீட்டிங், அதற்காக அந்த அமைப்பை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர விரும்புவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>மேலும், இங்கிலாந்து NHS அமைப்பின் தலைவராக இருந்த அமண்டா பிரிச்சார்டைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பணியாளர்கள் வேலை இழக்க இருக்கிறார்கள் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>26 நாட்களில் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலா பயணிகள்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/tourists-visited-to-sri-lanka-in-first-26-days/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Feb 2025 05:54:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[England]]></category>
		<category><![CDATA[Sri Lanka Tourism]]></category>
		<category><![CDATA[tourism]]></category>
		<category><![CDATA[Tourist Visa]]></category>
		<category><![CDATA[Tourists Visited To Sri Lanka In First 26 Days]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=190687</guid>

					<description><![CDATA[2025 ஆம் ஆண்டின் முதல் 26 நாட்களில் 200,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு (Srilanka) வருகை தந்துள்ளனர். இங்கிலாந்து (England), ஜெர்மனி, சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்தும் கணிசமான எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியுள்ளது. இந்த விடயம் இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட சமீபத்திய புள்ளிவிவரங்களில் குறிப்பிட்டுள்ளது. அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், ஜனவரி 26, 2025 வரை இலங்கை 212,838 சுற்றுலாப் பயணிகளின் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இந்த எண்ணிக்கை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>2025 ஆம் ஆண்டின் முதல் 26 நாட்களில் 200,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு (Srilanka) வருகை தந்துள்ளனர்.</p>
<p>இங்கிலாந்து (England), ஜெர்மனி, சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்தும் கணிசமான எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியுள்ளது.</p>
<p>இந்த விடயம் இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட சமீபத்திய புள்ளிவிவரங்களில் குறிப்பிட்டுள்ளது.</p>
<p>அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், ஜனவரி 26, 2025 வரை இலங்கை 212,838 சுற்றுலாப் பயணிகளின் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>அதன்படி, இந்த எண்ணிக்கை ஏற்கனவே கடந்த ஆண்டு ஜனவரியில் பதிவு செய்யப்பட்ட 208,253 வருகைகளை மிஞ்சியுள்ளது.</p>
<p>இதற்கிடையில், ஜனவரி இரண்டாவது வாரத்தில் அதிகபட்ச சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளது.</p>
<p>மாதத்தின் மூன்றாவது வாரத்தில் 57,473 வருகைகளும், முதல் வாரத்தில் 54,853 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வந்துள்ளனர்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வாரத்துக்கு 4 நாட்கள் வேலை திட்டம்! ஒப்புதல் அளித்துள்ள பிரித்தானிய நிறுவனங்கள்</title>
		<link>https://tamilnaadi.com/news/world/200-companies-in-the-uk-offer-4-day-work-weeks/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Jan 2025 13:22:58 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[200 Companies In The Uk Offer 4 Day Work Weeks]]></category>
		<category><![CDATA[England]]></category>
		<category><![CDATA[europe]]></category>
		<category><![CDATA[United Kingdom]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=189716</guid>

					<description><![CDATA[வாரத்துக்கு 5 நாட்கள் வேலை முறை என்பது சோர்வை ஏற்படுத்துவதாக கூறி 4 நாட்கள் மட்டுமே வேலை பார்க்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த பல நாடுகள் முயற்சித்து வருகின்றன. அந்தவகையில், பிரித்தானியா வாரத்துக்கு 4 நாட்கள் வேலை திட்டம் சோதனை முயற்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டத்துக்கு 100 நிறுவனங்கள் ஒப்புதல் அளித்தன. இந்த திட்டத்தால் சம்பளம், சலுகைகள் எதுவும் குறைக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரித்தானியாவில் இந்த திட்டம் வெற்றிபெற்றுள்ள நிலையில், வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>வாரத்துக்கு 5 நாட்கள் வேலை முறை என்பது சோர்வை ஏற்படுத்துவதாக கூறி 4 நாட்கள் மட்டுமே வேலை பார்க்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த பல நாடுகள் முயற்சித்து வருகின்றன.</p>
<p>அந்தவகையில், பிரித்தானியா வாரத்துக்கு 4 நாட்கள் வேலை திட்டம் சோதனை முயற்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டது.</p>
<p>இத்திட்டத்துக்கு 100 நிறுவனங்கள் ஒப்புதல் அளித்தன.</p>
<p>இந்த திட்டத்தால் சம்பளம், சலுகைகள் எதுவும் குறைக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்நிலையில் பிரித்தானியாவில் இந்த திட்டம் வெற்றிபெற்றுள்ள நிலையில், வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் திட்டத்தை பிரித்தானியாவை சேர்ந்த 200 நிறுவனங்கள் நிரந்தரமாக நடைமுறைப்படுத்தி உள்ளன.</p>
<p>இந்த 200 நிறுவனங்களில் மொத்தமாக 5000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.</p>
<p>வாரத்திற்கு 4 நாட்கள் பணிபுரிவதால் ஊழியர்கள் தங்களின் வாழ்க்கையை சந்தோஷமாகவும், நிறைவுடனும் வாழ முடியும் என தெரிவித்துள்ள நிறுவனங்கள், இது ஊழியர்களின் மனநலனையும் உடல்நலனையும் மேம்படுத்தும் எனவும் கூறியுள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சீனாவில் தீவிரமாக பரவும் HMPV&#8230; பிரித்தானியாவில் தற்போதைய நிலை</title>
		<link>https://tamilnaadi.com/news/world/know-about-hmpv-in-the-uk/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Jan 2025 14:31:36 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[china]]></category>
		<category><![CDATA[England]]></category>
		<category><![CDATA[Know About Hmpv In The Uk]]></category>
		<category><![CDATA[virus]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=186263</guid>

					<description><![CDATA[சீனாவில் தீவிரமாக பரவும் HMPV&#8230; பிரித்தானியாவில் தற்போதைய நிலை சீனாவில் பல மாகாணங்களில் தீவிரமாக வியாபித்துவரும் HMPV தொற்றால், உலக நாடுகள் தற்போது கலக்கத்துடன் கண்காணித்து வருகிறது. HMPV பாதிப்புக்கு தடுப்பூசிகள் எதுவும் இல்லை என்பதுடன், வெளியாகும் தகவல்களில் பெரும்பாலான சீனா மருத்துவமனைகள் பாதிப்புக்குள்ளானவர்களால் நிரம்பியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. ஆனால் குளிர் காலத்தில் இதுபோன்ற காய்ச்சல் ஏற்படுவது வாடிக்கையான ஒன்று என்றே இந்த விவகாரத்தில் சீனா பதிலளித்துள்ளது. இதனிடையே, இந்திய மாகாணமான கர்நாடகா அதிரடி நடவடிக்கையாக HMPV [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>சீனாவில் தீவிரமாக பரவும் HMPV&#8230; பிரித்தானியாவில் தற்போதைய நிலை</h4>
<p><a href="https://tamilnaadi.com/news/world/2025/01/06/baby-detected-with-hmpv-virus-india-s-1st-case/">சீனாவில்</a> பல மாகாணங்களில் தீவிரமாக வியாபித்துவரும் HMPV தொற்றால், உலக நாடுகள் தற்போது கலக்கத்துடன் கண்காணித்து வருகிறது.</p>
<p>HMPV பாதிப்புக்கு தடுப்பூசிகள் எதுவும் இல்லை என்பதுடன், வெளியாகும் தகவல்களில் பெரும்பாலான சீனா மருத்துவமனைகள் பாதிப்புக்குள்ளானவர்களால் நிரம்பியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.</p>
<p>ஆனால் குளிர் காலத்தில் இதுபோன்ற காய்ச்சல் ஏற்படுவது வாடிக்கையான ஒன்று என்றே இந்த விவகாரத்தில் சீனா பதிலளித்துள்ளது. இதனிடையே, இந்திய மாகாணமான கர்நாடகா அதிரடி நடவடிக்கையாக HMPV பாதிப்பு அறிகுறிகள் காணப்பட்டால் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும், முகக்கவசம் அணியவும் மக்களை அறிவுறுத்தியுள்ளது.</p>
<p>இதுவரை கர்நாடகா மாகாணத்தில் மூவருக்கு HMPV பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் HMPV பரவல் தொடர்பில் பிரித்தானியாவில் இதுவரை பெரிய கவலை எதுவும் எழவில்லை என்றே கூறப்படுகிறது.</p>
<p>இருப்பினும் கடந்த 15 நாட்களில் HMPV பாதிப்பு எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது என்றே தரவுகள் சுட்டிக்காட்டுகின்றது. மேலும், சீனாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை. கோவிட் பாதிப்பு எண்ணிக்கை குறித்தும் சீனா இதுவரை உண்மையான தரவுகளை வெளியிடவில்லை.</p>
<p>இருமல், காய்ச்சல், தொண்டை புண், மூச்சுத்திணறல் மற்றும் மூக்கு ஒழுகுதல் உள்ளிட்ட அறிகுறிகள் தொடக்கத்தில் காணப்படலாம் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.</p>
<p>பாதிப்பு தீவிரமடைந்தால், நிமோனியா அல்லது மூச்சுக்குழாய் அழற்சியாக உருவாகலாம் என்றும் வயதானவர்களுக்கு தீவிர பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.</p>
<p>சாதாரணமாக லேசான அறிகுறிகளின் காரணமாக, சோதனைகள் பொதுவாக தேவையில்லை, ஆனால் மக்கள் தொடர்ந்து அறிகுறிகளைப் பற்றி கவலைப்பட்டால், அவர்கள் தங்கள் பொது மருத்துவரை நாடலாம் என்றே அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மன்னார் வைத்தியசாலை சுகாதார நிலைமை : சுகாதார அமைச்சருக்கு பறந்த கடிதம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/mannar-hospital-health-situation/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 16 Dec 2024 12:20:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[England]]></category>
		<category><![CDATA[Mannar]]></category>
		<category><![CDATA[Ministry of Health Sri Lanka]]></category>
		<category><![CDATA[Nalinda Jayatissa]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=182214</guid>

					<description><![CDATA[மன்னார் வைத்தியசாலை சுகாதார நிலைமை : சுகாதார அமைச்சருக்கு பறந்த கடிதம் மன்னார் வைத்தியசாலையில் (Mannar Hospital) தொடர்ச்சியாக இடம்பெற்ற கர்ப்பிணி பெண்களின் மரணம் அதற்கு தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இங்கிலாந்தை (England) பின்புலமாக கொண்ட மன்னார் நலன்புரிச்சங்கம் சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவிற்கு (Nalinda Jayatissa) அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. அந்த கடிதத்தில் நலன்புரிச்சங்கத்தின் தலைவர் ஜேம்ஸ் பத்திநாதன் தெரிவித்துள்ளதாவது, &#8221;கடந்த நவம்பர் மாதம் 19ஆம் திகதி மன்னார் மாவட்ட பொது [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>மன்னார் வைத்தியசாலை சுகாதார நிலைமை : சுகாதார அமைச்சருக்கு பறந்த கடிதம்</h4>
<p><a href="https://tamilnaadi.com/news/local/2024/12/11/mannar-karate-athletes/">மன்னார்</a> வைத்தியசாலையில் (Mannar Hospital) தொடர்ச்சியாக இடம்பெற்ற கர்ப்பிணி பெண்களின் மரணம் அதற்கு தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இங்கிலாந்தை (England) பின்புலமாக கொண்ட மன்னார் நலன்புரிச்சங்கம் சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவிற்கு (Nalinda Jayatissa) அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.</p>
<p>அந்த கடிதத்தில் நலன்புரிச்சங்கத்தின் தலைவர் ஜேம்ஸ் பத்திநாதன் தெரிவித்துள்ளதாவது,</p>
<p>&#8221;கடந்த நவம்பர் மாதம் 19ஆம் திகதி மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தாயும் அவரது கருவிலிருந்த குழந்தையும் உயிரிழந்தார்கள். துரதிர்ஷ்டவசமாக, மருத்துவமனையின் மகப்பேறு விடுதியில் இது முதல் சம்பவம் அல்ல. மருத்துவ அலட்சியம் காரணமாக இதற்கு முன் மரணங்கள் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.</p>
<p>நாங்கள் மன்னார் நலன்புரி சங்கம் UK (MWAUK), பதிவுசெய்யப்பட்ட UK தொண்டு நிறுவனம் மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு ஒரு பகுதியாக எங்கள் அர்ப்பணிப்பு, ஆதரவளிப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம். நாங்கள் சமீபத்தில் வடக்கு மாகாண சுகாதாரத்துறையுடன் கூட்டு சேர்ந்துள்ளோம்.</p>
<p>மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவ விடுதியை புனரமைக்க 2023/2024, திட்டம் 37 மில்லியன் ரூபா உருவாக்குவதே இந்த முயற்சியின் நோக்கமாக இருந்தது. மன்னாரில் வசிப்பவர்களுக்கு பாதுகாப்பான, நம்பகமான மகப்பேறு வசதி, அதனை உறுதி செய்து பிற மாவட்டங்களுக்குச் செல்வதற்குப் பதிலாக இங்கேயே தரமான சிகிச்சையைப் பெற முடியும்.</p>
<p>இருப்பினும், நவம்பர் 18 ஆம் திகதி நடந்த சம்பவத்திற்கு பின்னர் மகப்பேறு விடுதிக்கு வருகை தரும் நோயாளிகளின் எண்ணிக்கை பூச்சியமாக குறைந்துள்ளது. தற்போது அனைத்து நோயாளிகளும் வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். நோயாளர் காவுவண்டி மூலம் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா போன்ற, வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.</p>
<p>பிரசவத்தின் போது கூட, இவ்வாறு நடைபெறுகின்றன. இந்த பயணங்களின் போது தாய்மார்கள் மற்றும் பிறந்த குழந்தைகள் பெரும் ஆபத்தில் உள்ளனர்.எனவே பாதுகாப்பான, அதிக நம்பகமான பின்வரும் சிக்கல்களை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.</p>
<p>சமீபத்திய சம்பவங்கள் தொடர்பான மூல காரணங்களை ஆராய்ந்து நிவர்த்தி செய்தல் ஒரு முழுமையான விசாரணை நடத்தவும் பொறுப்புக்கூறலை அடையாளம் காணவும் எதிர்கால நிகழ்வுகளைத் தடுக்கவும் வழிவகுக்கும்</p>
<p>வசதியின்மை மீதான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்: உள்ளூர்வாசிகளிடையே நம்பிக்கையை மீட்டெடுப்பதன் மூலம் நிரந்தரமான, நன்கு பயிற்சி பெற்ற ஊழியர்கள் மற்றும் மேலதிக செயற்பாடுகளை உறுதி செய்தல் போன்ற நிலையான தீர்வுகளை செயல்படுத்துதல். மன்னார் மாவட்டத்தில் இதுபோன்ற துயர சம்பவங்களைத் தடுக்க எதிர்காலத்தில் பாதுகாப்புகளை ஏற்படுத்துதல்.</p>
<p>எனவே நாம் தற்போதைய அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமென நம்புகிறோம். மன்னாரில் சுகாதார சேவையை மேம்படுத்த வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் உள்ளூர் மக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பபுதல் என்பதை உறுதிப்படுத்தவும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் மற்றும் குடியிருப்பாளர்கள் அதன் சேவைகளை அணுகுவதில் நம்பிக்கையுடன் உணருவர் என்பதில் நாம் உறுதியுடன் உள்ளோம்.</p>
<p>எனவே மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு ஆதரவளித்து வைத்தியசாலை உடன் தெளிவான தொடர்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை நிலைநிறுத்த வேண்டும் என நிர்வாகத்தை எதிர்பார்க்கின்றது இந்த முக்கியமான விஷயத்தில் உங்கள் பதிலையும், ஏதேனும் புதுப்பிப்புகளையும் எதிர்பார்க்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மனித இறப்புக்கு உதவி செய்ய இங்கிலாந்து சட்டவாக்காளர்கள் வழங்கிய வரலாற்று ஒப்புதல்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/uk-lawmakers-approval-dying-people-terminally-ill/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sat, 30 Nov 2024 11:48:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[England]]></category>
		<category><![CDATA[Uk Lawmakers Approval Dying People Terminally Ill]]></category>
		<category><![CDATA[United Kingdom]]></category>
		<category><![CDATA[World]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=179161</guid>

					<description><![CDATA[மனித இறப்புக்கு உதவி செய்ய இங்கிலாந்து சட்டவாக்காளர்கள் வழங்கிய வரலாற்று ஒப்புதல் நீண்ட காலமாக சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், தீராத நோயால் பாதிக்கப்பட்டு, ஆறு மாதங்களுக்கு குறைவான ஆயுட்காலத்தை கொண்ட முதியவர்கள், தங்கள் வாழ்நாளை முடித்துக்கொள்ள ஆதரவளிக்கும் வதையறா இறப்பு யோசனைக்கு ஆதரவாக இங்கிலாந்தின் (England) நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். இதன்மூலம் குறித்த இறப்புக்களை சட்டப்பூர்வமாக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையை இங்கிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுத்துள்ளனர். சுமார் ஐந்து மணிநேர தீவிரமான விவாதத்திற்குப் பின்னர், சில நாடாளுமன்ற [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>மனித இறப்புக்கு உதவி செய்ய இங்கிலாந்து சட்டவாக்காளர்கள் வழங்கிய வரலாற்று ஒப்புதல்</h4>
<p>நீண்ட காலமாக சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், தீராத நோயால் பாதிக்கப்பட்டு, ஆறு மாதங்களுக்கு குறைவான ஆயுட்காலத்தை கொண்ட முதியவர்கள், தங்கள் வாழ்நாளை முடித்துக்கொள்ள ஆதரவளிக்கும் வதையறா இறப்பு யோசனைக்கு ஆதரவாக இங்கிலாந்தின் (England) நாடாளுமன்ற <a href="https://tamilnaadi.com/news/local/2024/11/24/we-will-not-get-salary/">உறுப்பினர்கள்</a> வாக்களித்துள்ளனர்.</p>
<p>இதன்மூலம் குறித்த இறப்புக்களை சட்டப்பூர்வமாக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையை இங்கிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுத்துள்ளனர்.</p>
<p>சுமார் ஐந்து மணிநேர தீவிரமான விவாதத்திற்குப் பின்னர், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்ணீர் மல்க, Terminally Ill Adults (வாழ்க்கை முடிவு) யோசனையின் இரண்டாம் வாசிப்பின்போது வாக்களித்தனர்.</p>
<p>இதன்போது 330 ஆதரவாகவும், 275 எதிராகவும் வாக்களித்த நிலையில் யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது.</p>
<p>இந்த யோசனையின் விதிமுறைகளின்படி, ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் குறைவான ஆயுட்காலத்தை மாத்திரமே கொண்ட ஒரு பெரியவர், இரண்டு மருத்துவர்கள் மற்றும் ஒரு உயர் நீதிமன்ற நீதியரசர் தமது முடிவை அங்கீகரித்தால், தமது வாழ்நாளை முடித்துக்கொள்ள உதவி பெறலாம்.</p>
<p>இந்தநிலையில் குறித்த யோசனையை, சட்டமாக மாற்றுவதற்கு இன்னும் சில தடைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதன்படி பொது மற்றும் பிரபுக்கள் சபையில் ((The Commons and the House of Lords) ஏற்கனவே 200க்கும் மேற்பட்ட திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.</p>
<p>அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டாம் வாசிப்பின்போது நிபந்தனையுடனான ஆதரவை மட்டுமே வழங்கியுள்ளனர்.</p>
<p>யோசனையின் மூன்றாம் வாசிப்பில் குறிப்பிடத்தக்க திருத்தம் இல்லாவிட்டால், தாம் யோசனைக்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதில்லை என்று அவர்கள் நிபந்தனையை விதித்துள்ளனர்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இங்கிலாந்தில் கொன்சர்வேட்டிவ் கட்சிக்கு முதல் தடவையாக தலைமையை ஏற்றுள்ள கறுப்பின பெண்</title>
		<link>https://tamilnaadi.com/news/world/first-black-woman-lead-conservative-party-england/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sun, 03 Nov 2024 12:13:09 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Conservative Party]]></category>
		<category><![CDATA[England]]></category>
		<category><![CDATA[First Black Woman Lead Conservative Party England]]></category>
		<category><![CDATA[World]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=174375</guid>

					<description><![CDATA[இங்கிலாந்தில் கொன்சர்வேட்டிவ் கட்சிக்கு முதல் தடவையாக தலைமையை ஏற்றுள்ள கறுப்பின பெண் இங்கிலாந்தின் (England) கொன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராக முதல் தடவையாக கறுப்பின பெண்ணான கெமி படேனோக் (Kemi Badenoch) நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி, 44 வயதான படேனொக் இங்கிலாந்தில் ஒரு மிக முக்கிய அரசியல் கட்சிக்கு தலைமை தாங்கும் முதல் கறுப்பினப் பெண்ணாகவும் கருதப்படுகிறார். முன்னாள் பிரதமர் ரிசி சுனக்குக்கு பதிலாக அவர் கட்சியின் தலைமையை ஏற்றுள்ளார். முன்னதாக கடந்த ஜூலை பொதுத் தேர்தலில், கொன்சவேட்டிவ் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>இங்கிலாந்தில் கொன்சர்வேட்டிவ் கட்சிக்கு முதல் தடவையாக தலைமையை ஏற்றுள்ள கறுப்பின பெண்</h4>
<p>இங்கிலாந்தின் (England) கொன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராக முதல் தடவையாக கறுப்பின பெண்ணான கெமி படேனோக் (Kemi Badenoch) நியமிக்கப்பட்டுள்ளார்.</p>
<p>இதன்படி, 44 வயதான படேனொக் இங்கிலாந்தில் ஒரு மிக முக்கிய அரசியல் கட்சிக்கு தலைமை தாங்கும் முதல் கறுப்பினப் பெண்ணாகவும் கருதப்படுகிறார்.</p>
<p>முன்னாள் <a href="https://tamilnaadi.com/news/local/2024/10/29/harini-blames-ranil-on-salary-increament/">பிரதமர்</a> ரிசி சுனக்குக்கு பதிலாக அவர் கட்சியின் தலைமையை ஏற்றுள்ளார். முன்னதாக கடந்த ஜூலை பொதுத் தேர்தலில், கொன்சவேட்டிவ் கட்சி வரலாற்றில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருந்தது.</p>
<p>எனினும் கெமி படேனொக் தமது தொகுதியில் சக வலதுசாரி ரொபர்ட் ஜென்ரிக்கை, 12,418 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தார்.</p>
<p>இந்தநிலையில் கட்சியை விட்டு வெளியேறிய வாக்காளர்களை மீண்டும் வெற்றி கொண்டு கட்சிக்கு அழைத்து வரப்போவதாக கெமி படேனோக் உறுதியளித்துள்ளார்.</p>
<p>கடந்த 14 ஆண்டுகால அரசாங்கத்தில் கட்சி ரீதியாக தவறுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை தாம் ஒப்புக்கொள்வதாக தெரிவித்துள்ள கெமி படேனோக், எதிர்வரும் நாட்களில் கட்சியின் எதிர்கால செயற்பாடுகளுக்காக நியமிக்கப்போகும் உறுப்பினர்கள் தொடர்பில் எதிர்பார்ப்புக்கள் நிலவுகின்றன.</p>
<p>கடந்த ஒன்பது ஆண்டுகளுக்குள், குடியரசுக்கட்சியின் 6வது தலைவராக பதவியேற்றுள்ள படேனோக், பிளவுபட்ட கட்சியை ஒன்றிணைத்து, பிரதமர் ஸ்டார்மரின் தொழிற்கட்சி அரசாங்கத்திற்கு சவால் விடும் பணிகளை மேற்கொள்வார் என்று ஊடகங்கள் எதிர்வை வெளியிட்டுள்ளன.</p>
<p>இதேவேளை அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் சிறுபான்மையினரின் வாக்குகளை கவரும் வகையில் போட்டியிடுகின்ற அதேநேரம், இங்கிலாந்திலும் கறுப்பினப் பெண் முக்கிய கட்சி ஒன்றின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்றுள்ளமை சிறப்பம்சமாக கருதப்படுகிறது.</p>
<p>இதற்கிடையில் கொன்சவேட்டிவ் கட்சியின் கறுப்பின தலைமையை இங்கிலாந்தின் நடப்பு பிரதமரும் வரவேற்றுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
