உலகம்

டொலருக்கு பதிலாக BRICS கரன்சி

Published

on

டொலருக்கு பதிலாக BRICS கரன்சி

அமெரிக்க டொலருக்கு மாற்றாக பொதுவான BRICS நாணயத்திற்கு இந்தியா ஒப்புதல் அளிக்க வாய்ப்பில்லை, ஏனெனில் அது சீனாவின் ஆதிக்கத்தை அதிகரிக்கச்செய்து யுவானின் மதிப்பை மேலும் பலப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் (Eurozone) பொதுவாக பயன்படுத்தும் நாணயமான யூரோவைப் போல், ஒரு பொது நாணயத்தை அறிமுகப்படுத்த பிரிக்ஸ் நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் இது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க டொலர் மற்றும் யூரோவுக்கு சவால் விடும் வகையில் சர்வதேச வர்த்தகத்திற்கான ஒற்றை நாணயமாக பொதுவான பிரிக்ஸ் நாணயம் அமைக்கப்பட்டுள்ளது.

பிரேசில், ரஷ்யா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை பிரிக்ஸ் நாணயத்தை ஏற்றுக்கொள்கின்றன. ஆனால் இந்த விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு முக்கியமானது.

பிரிக்ஸ் நாணயம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை பல மாதங்களுக்கு முன்பு வெளிவிவகார அமைச்சர் மந்திரி எஸ். ஜெய்சங்கர் தெளிவுபடுத்தினார்.

பிரிக்ஸ் நாணயத்தில் இந்தியாவுக்கு ஆர்வம் இல்லை. நிதித்துறையில் ஏற்படும் நெருக்கடிகளை இந்தியா சமாளிக்கும் திறன் கொண்டது. அதற்காக புதிய கரன்சி தேவையில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

தேசிய நாணயமான ரூபாயின் (Rupees) பெறுமதியை வலுப்படுத்துவதில் இந்தியா கவனம் செலுத்தி வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. எனவே பிரிக்ஸ் நாணயம் இல்லாமல் இந்தியா வாழ முடியும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் இந்தியா நல்ல வர்த்தக மற்றும் ராணுவ உறவுகளைக் கொண்டுள்ளது. எனவே, பிரிக்ஸ் நாணயத்தை கொண்டு செல்வதன் மூலம் உறவை பலவீனப்படுத்த இந்தியா விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் நாடுகளுக்கு ஒரு நாள் பயணமாக பிரதமர் நரேந்திய மோடி சென்றுள்ளார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் ஆகஸ்ட் 22-24 தேதிகளில் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் 15வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் நேரில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் அமெரிக்க டாலரில் வர்த்தகம் செய்ய முடியாத ரஷ்யாதான், அமெரிக்க டாலரின் ஆதிக்கத்துக்கு சவால் விடும் வகையில் மீண்டும் பிரிக்ஸ் நாணயம் பரிசீலனையில் இருப்பதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிரேசில் அதிபர் லூயிஸ் லுலா டா சில்வா அறிவித்தார். ஆனால், சீனாதான் அதன் மூலம் அதிகபட்ச பொருளாதார மைலேஜைப் பெறும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version