உலகம்

இனி இவர்களுக்கும் மாதம் 1000 ரூபாய்! வெளியான செய்தி

Published

on

இனி இவர்களுக்கும் மாதம் 1000 ரூபாய்! வெளியான செய்தி

முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் பெறும் குடும்ப பெண்களும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

உரிமைத்தொகை திட்டத்திற்கு இதுவரை 1 கோடியே 54 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், விண்ணப்ப முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் முதியோர் ஓய்வூதியத்தால் அந்த குடும்பத்தில் உள்ள பெண்கள் உரிமைத் தொகை திட்டத்தில் பயன் பெறுவது தடைபடக்கூடாது என தலைமைச்செயலகத்தில் நடந்த ஆய்வுக்கூடத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய திட்டம், உழவர் பாதுகாப்பு திட்டம், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய ஓய்வூதிய திட்டம், போன்ற திட்டங்களில் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள பெண்கள், உரிமைத் தொகை திட்டத்திற்கு தகுதியானவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

வரும் 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவு செய்ய சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

இந்த முகாம்களில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் விண்ணப்பம் பதிவு செய்ய தவறியவர்களும் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கூறியுள்ளார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version