உலகம்

உக்ரைனுக்குள் மீண்டும் நுழையும் ரஷ்யா!

Published

on

உக்ரைனுக்குள் மீண்டும் நுழையும் ரஷ்யா!

உக்ரைனின் கார்கிவ் பிராந்தியத்திற்கு உட்பட்ட 5 நகரங்களை கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனை கார்கிவ் இராணுவ நிர்வாகத்தின் மாஸ்கோ தலைமையான விட்டலி கஞ்சேவ் ரஷ்ய தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய படைகள் கார்கில் பிராந்தியத்தில் 29 குடியேற்றங்களை கட்டுப்பாட்டில் வைத்துள்ளதுடன் உக்ரைனிய படைகள் கிளஸ்டர் குண்டுகளை இப்பகுதியில் தாக்குதலுக்கு பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

அத்துடன் இந்த தாக்குதலால் தங்களுடைய வீரர்களால் 17 குடியேற்றங்களில் இருந்து மட்டுமே செயல்பட முடிவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் உக்ரைன் ஆயுதப்படை இன்று கார்கிவ்-வின் 10 நகரங்கள் கடுமையான ஏவுகணை அல்லது வான் தாக்குதலுக்கு உள்ளானதாக ஒப்புக்கொண்டுள்ளது.

இருப்பினும், ரஷ்யா அறிவித்துள்ள 5 நகரங்களின் கைப்பற்றல் குறித்து எத்தகைய அங்கீகாரமும் உக்ரைன் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version