உலகம்

ஒரே நேரத்தில் தாக்கிய பருந்தும் பாம்பும்; எதிர்கொண்ட பெண்

Published

on

ஒரே நேரத்தில் தாக்கிய பருந்தும் பாம்பும்; எதிர்கொண்ட பெண்

64 வயது பெண்ணொருவர் ஒரே நேரத்தில் பாம்பு மற்றும் பருந்தால் தாக்கப்பட்ட அசாதாரண சம்பவம் லூசியானாவில் நடந்துள்ளது.

அமெரிக்காவின் லூசியானா எல்லைக்கு அருகிலுள்ள டெக்சாஸின் சில்ஸ்பீயில் ஒரு அசாதாரண சம்பவம் நிகழ்ந்தது. அங்கு பெக்கி ஜோன்ஸ் என்ற 64 வயது பெண் பருந்து மற்றும் பாம்பு இரண்டையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ளவேண்டிய திகிலூட்டும் போராட்டத்தை சந்தித்தார்.

ஜூலை 25ஆம் திகதி நடந்த இந்தச் சம்பவத்தில் அவருக்கு கை மற்றும் முகத்தில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன.

அன்றைய நாள், பெக்கி ஜோன்ஸ் தனது வழக்கமான புல்வெட்டும் வேலையில் ஈடுபட்டிருந்தபோது, எங்கிருந்தோ வந்த ஒரு பருந்து தன்னிடம் சிக்கிய பாம்பை தவறவிட்டது, அது சரியாக வானத்திலிருந்து விழுந்து பெக்கியின் கையில் விழுந்தது.

நெளிந்து கொண்டிருந்த பாம்பை அகற்றுவதற்கு போராடி, பெக்கி ஒரு ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொண்டார். அந்த பாம்பு அவரது கையைச் சுற்றி சுழன்று முகத்தில் தாக்கத் தொடங்கியது. அவரது கண்ணாடியை இரண்டு முறை தாக்கியது.

பெக்கி பாம்புடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது, பருந்து திடீரென வேகமாக வந்து தனது இரையான பாம்பை கைப்பற்ற முயன்றது.

இந்த போராட்டத்தில், பருந்தின் அலகுகள் பெக்கியின் சதையை ஆழமாக தோண்டி, மேலும் காயத்தை ஏற்படுத்தியது.

பெக்கி, பாம்பு மற்றும் பருந்து இடையே கடுமையான போர் நடந்தது. பருந்து தன் இரையைத் திரும்பப் பெற இடைவிடாமல் முயன்றது, பெக்கியை மீண்டும் மீண்டும் குத்தியது.

பெக்கியின் உடலில் குத்தப்பட்ட காயங்கள், வெட்டுக்கள், சிராய்ப்புகள், கீறல்கள் மற்றும் கடுமையான சிராய்ப்புகள் ஏற்பட்டன, அதுபோக பாம்பு அவரது முகத்தில் தாக்கியதால் அவரது கண்ணாடிகள் சேதமடைந்தன.

இடைவிடாத போராட்டத்திற்குப் பிறகு, பருந்து பெக்கியின் கையிலிருந்து பாம்பை எடுத்துச்சென்றது. இதில் பேக்கி பேரதிர்ச்சியில் இருந்தார், அவரது கணவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version