உலகம்

சுவிஸ் ராணுவ சேவையை புறக்கணிக்க அழைப்பு விடுத்த இளைஞர்களை விடுவித்த உச்ச நீதிமன்றம்!

Published

on

சுவிஸ் ராணுவ சேவையை புறக்கணிக்க அழைப்பு விடுத்த இளைஞர்களை விடுவித்த உச்ச நீதிமன்றம்!

ராணுவ சேவையை புறக்கணிக்க அழைப்பு விடுத்த சமூக ஆர்வலர்களை உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ள ஆச்சரிய சம்பவம் ஒன்று சுவிட்சர்லாந்தில் நிகழ்ந்துள்ளது.

ராணுவ சேவையை புறக்கணிக்க அழைப்பு விடுத்ததற்காக அபராதம்
2020ஆம் ஆண்டு, இளைஞர்களான மூன்று சமூக ஆர்வலர்கள், ராணுவ சேவையை புறக்கணிக்குமாறும், கட்டாய ராணுவ சேவை செய்யாத இளைஞர்களுக்கு விதிக்கப்படும் கூடுதல் வரியையும் புறக்கணிக்குமாறும் அழைப்பு விடுத்தார்கள்.

அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு, அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஆனால், ஜூலை, அதாவது கடந்த மாதம் 27ஆம் திகதி, உச்ச நீதிமன்றம், அந்த இளைஞர்களை விடுவிப்பதாக தெரிவித்துள்ளதுடன், அவர்கள் செலவிட்ட தொகையை ஃபெடரல் அரசு திருப்பிக் கொடுக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

அவர்களுடைய செயல்கள் சட்டத்துக்கு விரோதமானவை என்றும், கோவிட் காலகட்டத்தில் ராணுவம் மக்களைக் காக்கும் முக்கிய பணியில் ஈடுபட்டிருந்த நேரத்தில், நாட்டின் பாதுகாப்பை அபாயத்துக்குள்ளாக்கும் விதத்தில் அவர்களுடைய நடவடிக்கைகள் அமைந்திருந்ததாகவும் அவர்கள் மீது முன்பு குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பாணைய நீதிபதியோ, முந்தைய தீர்ப்பு, மக்களுக்கு தங்கள் கருத்தை வெளிப்படுத்தும் உரிமையை அளிக்கும் அரசியல் சாசன உரிமைக்கு முரணானது என்று கூறி அவர்களை விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1 Comment

  1. Pingback: இந்திய சுற்றுலா பயணிகளுக்கான ஷெங்கன் விசா ரத்து? - tamilnaadi.com

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version