உலகம்

மனைவியின் மூளையை சமைத்து சாப்பிட்ட கணவன்

Published

on

மனைவியின் மூளையை சமைத்து சாப்பிட்ட கணவன்

பிசாசை வழிபடுவதாக கூறும் ஒருவர், தனது மனையை கொன்று, அவரது மூளையை சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியின் மூளையை சாப்பிட்ட கணவன்
மெக்சிகோவில் மிகக் கொடூரமான குற்றத்திற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தன்னைத்தானே ‘பிசாசு வழிபாடு செய்பவர்’ என்று முத்திரை குத்திக்கொண்ட அந்த நபர் , தனது மனைவியைக் கொன்று, அவரது மண்டை ஓட்டை சாம்பல் கிண்ணமாகவும் (ashtray), அவரது மூளையை Tacos உணவாகவும் சாப்பிட்டுள்ளார்.

அவர் குடிப்பழக்கம் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்ததாகவும், மனைவியிடம் அடிக்கடி வன்முறையில் ஈடுபட்டதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கூறினர்.

அல்வாரோ (Alvaro) எனும் 32 வயதான அந்த நபர், ஜூலை 2 அன்று பியூப்லாவில் உள்ள தம்பதியரின் வீட்டில் கைது செய்யப்பட்டார்.

கட்டிடம் கட்டும் தொழிலாளியான அல்வாரோ, ஜூலை 29 அன்று, ஐந்து பிள்ளைகளுக்கு தாயான தனது மனைவி மரியா மான்செராட்டை (Maria Montserrat) கொலை செய்துள்ளார்.

கொலையைச் செய்யும்போது சட்டவிரோத போதைப்பொருட்களை பயன்படுத்தி போதையில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

விசாரணையின் போது, ​​குற்றத்தைச் செய்ய பிசாசு தனக்கு உத்தரவிட்டதாக அல்வாரோ அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

மனைவியைக் கொன்றுவிட்டு, அவரது உடல் உறுப்புகளை வெட்டி பிளாஸ்டிக் பையில் போட்டுள்ளார். சில பைகளை வீட்டின் பின்புறமுள்ள சிற்றோடையில் வீசியுள்ளார், ​​மீதியை வீட்டுக்குள்ளேயே வைத்திருந்தார்.

அல்வாரோ தனது மனைவியின் மூளையின் ஒரு பகுதியை டாக்கோஸில் வைத்து சாப்பிட்டதாகவும், உடைந்த மண்டை ஓட்டின் ஒரு பகுதியை சாம்பல் கிண்ணமாக பயன்படுத்தியதாகவும் ஒப்புக்கொண்டார்.

மனைவியைக் கொன்ற இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர் தனது வளர்ப்பு குழந்தைகளில் ஒருவரை அழைத்து குற்றத்தை ஒப்புக்கொண்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version