உலகம்

கொரோனா: உலகம் முழுவதும் கொல்லப்பட்ட பல இலட்சம் உயிர்கள்

Published

on

கொரோனா: உலகம் முழுவதும் கொல்லப்பட்ட பல இலட்சம் உயிர்கள்

சீனா திட்டமிட்டு கொரோனா வைரசை ஒரு ஆயுதமாக தயாரித்ததாக ஊஹான் ஆய்வு மையத்தில் பணிபுரிந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சாவோ ஷாவோ எனும் ஆய்வாளர், ஜெனிபர் ஜெங் என்ற சர்வதேச பத்திரிக்கையாளர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அளித்த நேர்காணல் ஒன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், ஆய்வு மையத்தில் பணிபுரிந்த தனது சகாக்களில், 4 வகையான கொரோனா வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றில் விரைவாக பரவக் கூடிய வைரசை கண்டுப்பிடிக்க கூறியதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, கொரோனா வைரஸ் சீனாவால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், ஊஹான் வைரஸ் ஆய்வு மையத்தில் பணி புரிந்த ஒருவர் இவ்வாறான தகவலை கூறுவது இதுவே முதல் முறையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version