இலங்கை

இலங்கைக்கு யூரியா உரத்தை வழங்க ரஷ்யா ஆதரவு!

Published

on

இலங்கைக்கு யூரியா உரத்தை வழங்க ரஷ்யா ஆதரவு!

இலங்கையின் விவசாய நடவடிக்கைகளுக்கு யூரியா மற்றும் எம்ஓபி (MOP) உரங்கள் கிடைப்பதற்கான ஆதரவை வழங்க ரஷ்ய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நிலவும் இருதரப்பு ஒத்துழைப்பின் அடிப்படையிலும் இரு நாடுகளுக்குமிடையில் நிலவும் நட்புறவை உறுதிப்படுத்தும் வகையிலும் யூரியா மற்றும் எம்ஓபி (MOP) உரங்களை வழங்கும் இந்த ஏற்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (03) காலை விவசாய அமைச்சில் இடம்பெற்றதோடு இக்கலந்துரையாடலில் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் எச்.இ. லெவன் டழகராயன் மற்றும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கையின் விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான யூரியா மற்றும் எம்ஓபி (MOP) உரங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு இரு நாடுகளுக்கும் இடையிலான பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் ரஷ்ய தூதுவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அடுத்த பருவகாலம் ஆரம்பிக்கும் முன்னர் இப்பணிகளை நிறைவு செய்து அடுத்த பருவத்தில் விவசாயிகளுக்கு யூரியா மற்றும் எம்ஓபி(MOP) உரங்களை வழங்கும் பணி ஒழுங்கை வெற்றியடைய செய்யும் நோக்கில் நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

#srilankaNews

1 Comment

  1. Pingback: சிவனொளிபாத மலைக்கு செல்லத் தடை - tamilnaadi.com

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version