உலகம்

புனி­தத் தலம் மேல் அரை நிர்­வா­ண­மாக புகைப்படம் எடுத்த சுற்றுலா பயணி!

Published

on

இந்தோனேசியாவிற்கு சென்ற  சுற்றுலா பயணி ஒருவர் தவறாக நடந்து கொண்டமையால் நாடு கடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ரஷ்ய நாட்டை சேர்ந்த 24 வயதுடைய யூரி சிலிக்­கின்  என்ற ஆடவரே சுற்றுலாவிற்காக  இந்­தோ­னே­சி­யா சென்றுள்ளார். அங்கு புனி­தத் தலம் ஒன்­றின் ­மேல் அரை நிர்­வா­ண­மாக இருந்தவாறு புகை படம் எடுத்துள்ளார்.

இந்­துக்­கள் புனி­தத் தல­மா­கக் கரு­தும் அகுங்மலை­யின் உச்­சி­யில் இடைக்­குக்­ கீழே  ஆடை­யின்றிபட­மெ­டுத்துள்ளார். இதனை அறிந்த அந்நாட்டு அரசாங்கம் அவரிற்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது.

அதாவது புனித தலத்தினை அவமதித்தமையால் அவரை நாடு கடத்தியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பிர­பல சுற்­றுலாத் தல­மான பாலி, தவ­றாக நடந்­து­கொள்­ளும் சுற்­றுப்­ ப­ய­ணி­கள் ­மீது நட­வடிக்கை எடுக்­கப் ­போ­வ­தாக உறுதி­ய­ளித்­தி­ருந்­தமை குறிப்பிடத்தக்கது.

#world

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version