உலகம்

உக்ரைனுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டார் ஜோ பைடன்

Published

on

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீரென உக்ரைன் சென்றுள்ளார்.

ரஸ்ய படையெடுப்புக்கு பிறகு முதல் முறையாக உக்ரைன் வந்த அவர், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து, சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.

இரு தரப்பும் உக்கிரமான தாக்குதலை தொடங்குவதற்கு தயாராகி வரும் நிலையில், ஜோ பைடனின் இந்த திடீர் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த சந்திப்பின்போது உக்ரைனுக்கு நீண்டதூரம் சென்று தாக்கும் ஆயுதங்களை வழங்குவது தொடர்பாக அமெரிக்காவிடம் உக்ரைன் அதிபர் கேட்டுக்கொண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனுடன் அமெரிக்கர்கள் துணை நிற்பதாகவும், உலகம் உங்களுடன் நிற்கிறது என்றும், உக்ரைனுக்கு ஆயுத விநியோகத்தை அதிகரிப்பதாகவும் ஜோ பைடன் வாக்குறுதி அளித்துள்ளார்.

#world

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version