உலகம்

4 வைரஸ்கள் சேர்ந்த திரிபு! – சீனாவில் எகிறும் தொற்றாளர்கள்

Published

on

சீனாவில் தற்போது கொரோனா பரவல் அதிகமாகி கொண்டே இருக்கிறது. தினமும் லட்சக்கணக்கானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவதாகவும், ஆயிரக்கணக்கானோர் பலியாகுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

கொரோனா எழுச்சிக்கு ஒமைக்ரானின் பி.எப்.7 என்ற வைரஸ் பரவல்தான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சீனாவில் நான்கு வைரஸ்கள் சேர்ந்ததால் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது என்று இந்தியாவின் மத்திய கொரோனா தடுப்பு குழு தலைவர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:- சீனாவில் பி.எப்.7 வைரசால் பாதிக்கப்படுபவர்கள் 15 சதவீதமாக உள்ளனர். 50 சதவீதம் பேர் பி.என். மற்றும் பி.க்யூ வரிசை ஆகியவற்றாலும், 10 முதல் 15 சதவீதம் பேர் எஸ்.வி.வி. மாறுபாட்டால் பாதிக்கப்படுகிறார்கள். 4 வைரஸ்கள் சேர்ந்ததால் சீனாவில் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.

சீனாவில் கொரோனா அதிகரித்தாலும் இந்தியாவில் பீதியடைய தேவையில்லை. இங்கு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி, தடுப்பூசிகள், பரவலான நோய் தொற்றின் மூலம் பெறப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றால் இந்தியா பலன் அடைந்துள்ளது.

சீனாவில் மக்கள் பெற்ற தடுப்பூசியின் செயல் திறன் குறைவாக இருக்கும். அவர்களில் பெரும்பாலானோர் மூன்று முதல் நான்கு டோஸ்களை பெற்றுள்ளனர். 97 சதவீத இந்தியர்கள் இரண்டு டோஸ் செலுத்தி கொண்டுள்ளனர். தடுப்பூசி போடும் போது மக்கள் வெளிப்படுத்திய ஆர்வம் நாம் மிகவும் பாதுகாப்பான சமூகத்தில் இருப்பதை காட்டுகிறது – என்றார்.

#world #corona #India

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version