உலகம்

சுரங்கத்தில் வெடி விபத்து! – 25 பேர் உயிரிழப்பு

Published

on

துருக்கியில் கருங்கடல் பகுதி அருகே அமைந்துள்ள பர்டின் மாகாணத்தின் அம்சரா நகரில் அமைந்துள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்தநிலையில், நிலக்கரி சுரங்கத்தில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

இதில் வேலை செய்துகொண்டிருந்த பலரும் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் சுரங்கத்தில் சிக்கிய 50-க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்டனர்.

இந்நிலையில், நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சுரங்கத்திற்குள் சிக்கிய எஞ்சியோரை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிகிறது.

#world

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version