உலகம்

அதிக குழந்தைகள் பெற்றால் வரிச் சலுகை! – அரசு அதிரடி

Published

on

அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கும் சீனாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு “ஒரு குழந்தை விதி” கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில், அங்கு பிறப்பு விகிதம் குறைந்தபடியே வந்தது.

இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு ஒரு குழந்தை விதி ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆண்டு 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள தம்பதிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனாலும் கடந்த 5 ஆண்டுகளாக பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்தது.

இதையடுத்து பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒன்றுக்கு மேல் குழந்தைகளை பெற்றெடுக்கும் தம்பதிகளுக்கு சலுகைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.

இதற்காக வரிகள் தள்ளுபடி, சிறந்த சுகாதார காப்பீடு, இளம் குடும்பங்களுக்கு கல்வி, வீட்டு கடன், வேலைவாய்ப்பு உள்ளிட்ட சலுகைகளை வழங்கி குழந்தை பிறப்பு விகிதத்தை ஊக்கப்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பணக்கார சீன நகரங்கள், அதிக குழந்தைகளை பெற ஊக்குவிப்பதற்காக, வரி வீட்டு கடன், கல்வி சலுகைகள் வழங்குகின்றன. இது போன்ற அனைத்து மாகாணங்களும் சலுகைகள் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

பிறப்பு விகிதம் சரிந்து கொண்டே சென்றால் சீனாவின் மக்கள் தொகை 2025-ம் ஆண்டுக்குள் குறைய தொடங்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#world

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version