உலகம்

பாரில் துப்பாக்கிச் சூடு! – 14 பேர் உயிரிழப்பு

Published

on

மதுக்கடையில் நுழைந்த மர்ம நபர்கள் திடீரென நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தென்னாபிரிக்கா தலைநகரின் தென்கிழக்கில் ஜோகன்னஸ்பர்க்கின் மிகப்பெரிய நகரமான சோவெட்டோவின் ஆர்லாண்டோ மாவட்டத்தில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் குறித்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக தகவல் கிடைத்தது. நாங்கள் சம்பவ இடத்திற்கு சென்றபோது, 12 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டது.

மேலும், 11 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் மேலும் இருவர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#SouthAfrica

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version