உலகம்

கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு!

Published

on

தாய்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

உலகையே உலுக்கிய கொரோனாத் தொற்றானது தற்போது குறைவடைந்து வருகிறது. சில நாடுகளில் அடுத்த அலை தலைதூக்க ஆரம்பித்துள்ளது.

இருப்பினும் பெரும்பாலான நாடுகள் அனைத்தும் கொரோனாத் தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ள நிலையில், தமது நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றன.

இந்த நிலையில், தற்போது தாய்லாந்தும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது. இதன்படி தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இனி கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் முதலாம் திகதி முதல் கொரோனாத் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை முழுமையாக பெற்ற வெளிநாட்டவர்கள், தாய்லாந்துக்கு வருகை தரும்போது அவர்கள், எவ்வித சோதனைக்கும் உட்படுத்தப்படமாட்டார்கள். அதேவேளை தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#World

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version