உலகம்

சீனாவில் மாணவர்களுக்குக் கொரோனா! – நேரடி வகுப்புகள் இரத்து

Published

on

சீனத் தலைநகர் பீஜிங்கில் பாடசாலை மாணவர்களுக்குக் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் நேரடி வகுப்புகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

பீஜிங்கில் சாயோயாங் மாவட்டத்தில் நடுநிலைப் பாடசாலை மாணவர்கள் 10 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பீஜிங் நிர்வாகம் உஷார் அடைந்துள்ளது. அங்கு பாடசாலைகளில் நேரடி வகுப்புகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. கொரோனா பரிசோதனைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

மேலும் பொதுமக்களில் 4 பேருக்கும் பீஜிங்கில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவின் பிரதான பகுதியில் 24 ஆயிரத்து 326 பேருக்கு சமூகத் தொற்று பதிவாகியுள்ளது. அவர்களில் பெரும்பாலோருக்கு அறிகுறிகள் இல்லை.

சீன நாட்டின் பொருளாதார தலைநகர் என்ற சிறப்புக்குரிய ஷாங்காய் நகரில், இன்று காலையுடன் முடிந்த ஒரு நாளில் கொரோனாத் தொற்றால் 12 பேர் உயிரிழந்துள்ளமை அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன.

#WorldNews

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version