உலகம்

கொலம்பியாவில் குண்டு வெடிப்பு! – 6 இராணுவத்தினர் சாவு

Published

on

கொலம்பியாவில் நிகழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பில் சிக்கி 6 இராணுவத்தினர் பலியாகினர்.

கொலம்பியா வடமேற்கில் உள்ள ஆண்டியோகுயா மாகாணத்தில் இராணுவத்தினர் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்குள்ள கிராமப்புறத்தில் அவர்களது வாகனம் சென்றபோது, வீதியோரம் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டின் மீது ஏறியது. அப்போது குண்டு வெடித்து வாகனம் உருக்குலைந்து போனது.

இந்தக் குண்டு வெடிப்பில் 6 இராணுவத்தினர் உடல் சிதறிப் பலியாகினர்.

தாக்குதலின் பின்னணியில், வளைகுடா கிரிமினல் கும்பல் இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

#WorldNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version