உலகம்

தன் பிள்ளைகளுக்காக பட்டினியால் உயிரைவிடும் தாய் (வீடியோ)

Published

on

உலகில் அதிக தியாகம் செய்யும் தாய் பெண் ஆக்டோபஸ் ஆகும். ஏனெனில் ஒரே நேரத்தில் சுமார் 50 ஆயிரம் முட்டைகளை இடுகின்றது.

இதனைத்தொடர்ந்து 6 மாதங்கள் வரை முட்டைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் தாய் எந்த உணவையும் சாப்பிடுவதைத் தவிர்த்து இருக்கும்.

6 மாதங்களுக்குப் பிறகு, முட்டைகள் பொரிந்து தாய் பட்டினியால் இறந்துவிடும். அதனால் தான் பெண் ஆக்டோபஸ் உலகின் மிகவும் தியாகம் செய்த தாய் என்று அழைக்கப்படுகிறது.

எட்டுக் கைகள் கொண்ட ஒரு நீர்வாழ் உயிரி. இவற்றின் திறமைகளும் இயற்கை அவற்றின் உடலமைப்பில் ஏற்படுத்தியுள்ள அதிசயத் தன்மைகளும் நம்மை வியப்படையச் செய்கின்றன.

எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ள தன் உடலைச் சுருக்கி, சிறிய பாறை இடுக்கிலும் நுழைந்து தப்பிக்கும் ஆற்றலை ஆக்டோபஸ் கொண்டுள்ளது.

#WorldNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version