உலகம்

100 விமானங்கள் இரத்து: பயணிகள் கடும் அவதி

Published

on

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று (26) காலை கடும் மூட்டம் காணப்பட்டமையால், விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டமையால், ஆயிரக்கணக்கான பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

அந்நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதி நகரங்களுக்கு செல்லும் 100 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக, அந்நாட்டின் இரண்டு பெரிய விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

ஹிரோகி ஹயகாவா விமான நிலையத்தில் இருந்து செல்லும் 79 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டமையால் 5,100 பயணிகள் பாதிக்கப்பட்டதாக விமான நிலைய கட்டுப்பாட்டு இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மாலை 4 மணி வரை 49 விமான சேவைகளை ஜப்பான் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் இரத்து செய்தமையால், 2,460 பயணிகள் அவதியடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#WorldNews,

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version