உலகம்

கன மழையால் தத்தளிக்கும் மலேசியா!-

Published

on

மலேசியாவில் 3 நாட்களாக பெய்துவரும் கன மழை காரணமாக, 6 மாகாணங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

தலைநகர் கோலாலம்பூர், செலங்கோர், கெலண்டன், நெகிரி செம்பிலான், மெலாகா உள்ளிட்ட நகரங்களில் இடுப்பளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளது.

இதற்கு முன் மலேசியாவில் பெய்த அதிகபட்ச மழைப் பொழிவை விட தற்போது 2 மடங்கு அதிகமாக மழை பெய்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், 4 ஆயிரம் பேர் வீடுகளில் இருந்து மீட்கப்பட்டு, முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

#WorldNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version