உலகம்

பிலிப்பைன்ஸைப் புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த புயல்!

Published

on

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த புயல் தாக்கம் காரணமாக ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் – மின்டனாவ் மாகாணத்தில் சக்தி வாய்ந்த புயல் மற்றும் கன மழை காரணமாக பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

இந்நிலையில் புயல் மற்றும் மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர்.

இதற்கு முன்னதாக சூறாவளிக் காற்றால் வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளதுடன், கட்டடங்களும் இடிந்து விழுந்தமை குறிப்பிடத்தக்கது.

பிலிப்பைன்ஸ் கடலோர காவற்படை ரப்பர் படகுகள் மற்றும் கயிறுகளைப் பயன்படுத்தி மக்களை அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்

#WorldNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version