உலகம்

சுரங்கத்திற்குள் பாரிய தீ -52 பேர் பரிதாபமாக சாவு

Published

on

சுரங்கத்திற்குள் ஏற்பட்ட பாரிய தீயால் 52 தொழிலாளர்கள் பரிதாபமாக சாவடைந்துள்ளனர்.

ரஷியாவின் சைபீரியா பிரதேசத்தில் லிஸ்ட்வேஸ்னியா எனும் இடத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட தீயால் 52 தொழிலாளர்கள் பரிதாபமாக சாவடைந்துள்ளனர்.

இச் சுரங்கம் தலைநகரம் மாஸ்கோவில் இருந்து 3,500 கி.மீட்டர் தூரத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு நேற்று நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.

சுரங்கத்தின் காற்றோட்டத்துக்காக பல குழிகள் அமைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இக் குழிகளின் ஒரு குழியின் முன் பகுதியில் இருந்த நிலக்கரி தூணில் திடீரென தீப்பிடித்ததால், அத்தீ சுரங்கம் முழுவதும் பரவியது.

இத்தீயில் 52 தொழிலாளர்கள் கருகி சாவடைந்தனர் .

பலர் படுகா யம் அடைந்தனர்.

காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் .

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 49 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இவ் விபத்து தொடர்பில் சுரங்க நிறுவன அதிகாரிகள் 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக ரஷிய செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்விபத்தல் நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது.

#world

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version