உலகம்

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு! – ஒருவர் பலி -13 பேர் படுகாயம்

Published

on

அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், 13 பேர் காயமடைந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டென்னிசி மாகாணத்தில் மெம்பிஸின் பகுதியில் உள்ள ஒரு சந்தை வளாகத்தில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துடன், ஏனையவர்களை பாதுகாப்பாக மீட்டனர்.

துப்பாக்கிச்சூடு நடத்தினார் என நம்பப்படும் சந்தேகநபர் இறந்துவிட்டார் எனவும், அவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்டவர்கள் காயங்களின் அளவு தீவிரமாக இருக்கின்றன என அதிகாரிகள் தகவல் வழங்கியுள்ளனர்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version