உலகம்

நைஜீரியா – சிறை தகர்ப்பு! – 240 கைதிகள் தப்பிப்பு

Published

on

நைஜீரியா – கோசி மாகாணத்தில் ஹப்பா நகரிலுள்ள சிறைச்சாலை ஒன்றில் தடுப்புச் சுவரை சக்தி வாய்ந்த வெடி குண்டு மூலம் தகர்த்து உள் நுழைந்த பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதன் மூலம் சிறையிலிருந்து 240 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.  2 சிறைக்கைதிகள் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சிறையில் 224 விசாரணை கைதிகள் மற்றும் 70 குற்றவாளிகள் உள்ளிட்ட மொத்தம் 294 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறைச்சாலை மீது பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பயங்கரவாதிகள் சிறைச்சாலையின் தடுப்பு சுவரில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வைத்து தகர்த்து உள்ளே நுழைந்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

தப்பியோடிய கைதிகளை பிடிக்க தேடுதல் வேட்டை துரிதகதியில் நடைபெறுகிறது. கைதிகள் பற்றிய தகவலை இன்டர்போல் அமைப்பிடம் ஒப்படைத்துள்ளோம். கைதிகளை தப்பவைத்து பயங்கரவாதிகளையும் விரைவில் பிடிப்போம் – என அந் நாட்டு உள்துறை அமைச்சர் ராப் அரெக்பசுலோ தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version