இலங்கை

தனுஷ்க பிணை விவகாரம்! – டொலர் திரட்டுவதில் சிக்கல்

Published

on

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு 2 இலட்சம் அவுஸ்திரேலிய டொலர் பிணைத் தொகையை திரட்டுவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் போராடி வருவதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

மீண்டும் ஒரு முறை பிணை கோரி மேல்முறையீடு செய்வதற்காக அடுத்த வார தொடக்கத்தில் நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவே குறித்த தொகையை திரட்ட முயல்வதாக அறியமுடிகிறது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகள் நன்கொடைகளை கோரியுள்ள நிலையில், கிரிக்கெட் வீரர் வனிந்து ஹசரங்க, அடுத்த வாரம் பிணை விண்ணப்பத்தை தாக்கல் செய்வதற்கு பாரிய தொகையை கையளித்துள்ளார் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version