செய்திகள்

பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி

Published

on

உலகக் கிண்ண ரி20 போட்டித் தொடரின் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் இந்தியா அணி வெற்றிப் பெற்று முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பந்துவீச்சில் இந்தியா அணி சார்ப்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்திக் பாண்டிய ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.

துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்ப்பில் ஷான் மசூத் ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களையும், இப்திகார் அஹமட் 51 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டிருந்தனர்.

அதனடிப்படையில் இந்தியா அணிக்கு 160 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 163 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

பந்துவீச்சில் ஹரிஸ் ரவூப் 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்ப்பில் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 82 ஓட்டங்களையும் ஹர்திக் பாண்டிய 40 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டிருந்தனர்.

அதனடிப்படையில் இந்தியா அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் அணி வெற்றி பெற்றுள்ளது.

#Sports

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version