செய்திகள்

தொடர் வெற்றி – உலக சாதனை படைத்த ரோகித்

Published

on

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் 20 ஓவர் போட்டி ரோஸ் பவுலில் நேற்று நடைபெற்றது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 13 வெற்றிகளை பெற்றுள்ளது.

இதன் மூலம் தொடர்ச்சியாக 13 டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் கேப்டன் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார். அதுமட்டுமின்றி இந்திய அணியின் முழு நேர கேப்டனாக ரோகித் சர்மா பொறுப்பேற்ற பிறகு அவர் தலைமையிலான இந்திய அணி ஒரு 50 ஓவர் மற்றும் 20 ஓவர் போட்டியில் கூட தோல்வி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#Sports

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version