விளையாட்டு

தென்னாப்பிரிக்க தொடரானது ராகுலுக்கு சவாலானது!!

Published

on

இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு, தென்னாப்பிரிக்க தொடரானது சவால் நிறைந்தது என ஆசிட் டெஸ்ட் என முன்னாள் வீரர் ரிதீந்தர் சிங் சோதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்;

ரவி சாஸ்திரி பயிற்சியில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்தில் கலக்கியிருக்கும் இந்திய அணி அதிவேக பவுன்ஸ் பிட்ச்கள் கொண்ட, தென்னாப்பிரிக்காவில் டிசம்பர் 26 முதல் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பது பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு பெரிய சவால்.

3 டெஸ்ட் மட்டுமல்ல, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரும் உள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க அணி வலுவான அணியில்லை என்றாலும், சொந்த நாட்டில் அவர்கள் பந்து வீச்சு திறனாக இருக்கும்.

ஆனால் இந்திய துடுப்பெடுத்தலில், ரோகித் இல்லை, ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, கோலி டாப் ஆர்டர் இந்த பவுலிங்குக்கு எதிராக முன்னேறுமா என்பது தெரியவில்லை.

இந்தத் தொடரில் தோற்றால் அது ராகுல் டிராவிட்டுக்கு நிச்சயம் நற்பெயரைக் களங்கப்படுத்தும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

#SportsNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version